'அக்பர்' சிங்கத்துடன், 'சீதா' சிங்கத்தை அடைப்பதா? நீதிமன்றத்தை தொட்ட பிரச்சனை!

'அக்பர்' சிங்கத்துடன், 'சீதா' சிங்கத்தை அடைப்பதா? நீதிமன்றத்தை தொட்ட பிரச்சனை!

 டி.இ.முகமது,

 'அக்பர்' சிங்கத்துடன்,  'சீதா' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைக்க எதிர்ப்பு தெரிவித்திருக்கும் விஎச்பி அமைப்பு  நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. 

   திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. சிலிகுரி உயிரியல் பூங்காவில் பெண் சிங்கத்துக்கு 'சீதா' என்றும், பெண் சிங்கத்துக்கு 'அக்பர்' என்றும் பெயர் வைத்து, அந்த சிங்கங்களை ஒரே பகுதிக்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்வங்க உயர்நீதிமன்றத்தில் அம்மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

 அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. அக்பர் என்பது புகழ்பெற்ற முகலாய மன்னரின் பெயராகும். ராமாயணத்தில் ராமனின் மனைவி பெயர் சீதா என்பது குறிப்பிடத்தக்கது. 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விதமாக உள்ளது என என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

  இந்தவழக்கு தேதி வரும் 20 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அடப்பாவிகளா இதுலேயுமா மதத்தை பார்பீங்க?