மக்களின் மனதை புரிந்து கொண்டு முதலமைச்சர்  ஆட்சி செய்கிறார்! பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

மக்களின் மனதை புரிந்து கொண்டு முதலமைச்சர்  ஆட்சி செய்கிறார்! பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

ம.பா.கெஜராஜ்,

படங்கள்.ஆர்.ரமேஷ்,

 பல்வேறு திட்டங்களை துவக்கிவைப்பதற்காக திருப்பத்தூர் வருகை புரிந்தார் அமைச்சர் எ.வ.வேலு.  இவ்விழாக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார்.

 திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

 மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இவளர்மதி அவர்கள் விழாக்களுக்கு வருகைபுரிந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் வரவேற்றார்.

  பின்னர் அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தெரிவித்ததாவது:-

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப்படும் என்ற திருக்குறளில் நீதிநெறியுடன் மக்களை காப்பாற்றும் ஆட்சியாளர்கள் தான் மக்களுக்கு தலைவனாக போற்றப்படுவான் என்ற பொருளாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும் என்று சொன்னால் அது முறையாக இருக்கும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்றத்தாழ்வு சமுதாயத்தில் இல்லை, எனக்கு அனைவரும் சமம் தான் என்று சொல்லி ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர் தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அதனால் தான் மக்களை காப்பாற்றுவதிலும், மக்களுக்கு உரிய நேரத்தில் உதவிகளை செய்வதிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வள்ளுவன் பெருந்தகை சொன்ன குரளுக்கு பொருத்தமாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்.

  அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாக எடுத்த முயற்சியில் நீங்கள் கொடுத்த மனுக்களின் பலனாக இன்றைய தினம் திருப்பத்தூர் கோட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தாட்கோ, பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 1881 பயனாளிகளுக்கு ரூபாய் 7 கோடி 51 இலட்சத்து 8 ஆயிரத்து 491 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாணியம்பாடி கோட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தாட்கோ, பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 1985 பயனாளிகளுக்கு ரூபாய் 11 கோடி 22 லட்சத்து 53 ஆயிரத்து 978 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

  மேலும் பொதுப்பணி துறையின் மூலமாக ரூபாய் 7 கோடி மதிப்பிலான சுற்றுலா மாளிகை கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கேத்தாண்டாபட்டி, குரிசிலாப்பட்டு, அத்தனாவூர் ஆகிய மூன்று கிராமங்களில் ரூ.1.50 கோடி மதிப்பிலான கால்நடை மருந்தக புதிய கட்டடங்களும், வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக பயிற்சி மையம், சேமிப்பு கிடங்கு திருப்பத்தூர் நகரில் ரூபாய் 2 கோடிய 65 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களும் ஆக மொத்தம் ரூபாய் 11 கோடியே 28 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களையும் இன்றைய தினம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு இந்த அரசு கொண்டு வந்திருக்கிறது.

  மேலும் வாணியம்பாடி கலந்திரா கிராமத்தில் பொதுப்பணி துறையின் மூலமாக ரூபாய் 1.69 கோடி மதிப்பீட்டில் புதிய ஆய்வு மாளிகை கட்டிடம், கால்நடை பராமரிப்பு துறையின் மூலமாக மாதனூர் மற்றும் வடகரை ஆகிய இரண்டு கிராமங்களில் ரூபாய் 1.02 கோடி மதிப்பில் புதிய கால்நடை மருந்தகம் கட்டடங்கள், வாணியம்பாடி நகராட்சியில் பேருந்து நிழற்கூடை, கூடுதல் வகுப்பறை, சமுதாய கழிப்பறை போன்ற 8 இடங்களில் ரூபாய் 2 கோடி 92 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்களும், வேளாண்மை துறையின் மூலமாக துணை வேளாண் விரிவாக்க மையம் ரூபாய் 32 இலட்சம் மதிப்பிலான புதிய கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற கட்டிடத்தினுடைய மதிப்பீடு ரூபாய் 6 கோடியே 4 லட்சம் மதிப்பில்லான புதிய கட்டிடம் இன்றைய தினம் தமிழக அரசின் மூலமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதி ஒதுக்கியதன் அடிப்படையிலே இன்றைய தினம் பல்வேறு கட்டங்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

    மேலும் மக்களின் மனதை புரிந்து கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 21/2 ஆண்டு நிறைவடைந்து சென்றிருக்கின்ற காலத்தில் பல்வேறு திட்டங்கள் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வரப்பெற்றிருக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நேரடியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை அவகளுடைய திருக்கரங்களால் திறந்து வைத்தார்.

  சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் ஒரு இலக்கை வைத்துக் கொண்டு மாவட்ட நிர்வாகத்தை ஆட்சி நடத்தினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் அதிகம் என்பதால் அவர்களுக்கு சாதி சான்றிதழ்களை அதிகமாக வழங்கினார் அது தமிழ்நாட்டிலேயே அதிகமாக மலைவாழ் மக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம் தான் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர்  எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டு கூறியது.

  புதிதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றார் அவர் கிராம பகுதியை சார்ந்தவர் அதனால் கிராமப் பகுதியில் உள்ள பொது மக்களின் மனநிலையை நன்றாக புரிந்து கொண்டு அவர்களுக்கு என்னென்ன தேவைகள் வேண்டும் என்பதை அறிந்து கொண்டவர். மாவட்ட ஆட்சித்தலைவர் என்பவர் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றி முடித்துக் கொண்டு மீண்டும் சென்னைக்கு செல்கின்ற பொழுது பல்வேறு துறைகளில் இயக்குனர்களாக செயலாளர்களாக பணியாற்றக்கூடிய வாய்ப்பிருக்கிறது. அதனால்  மாவட்ட ஆட்சித்தலைவர் துறை செயலாளராக செல்ல வாய்ப்பு இருக்கிறது.

   ஆனால் எத்தனை துறைக்கு இயக்குனராக செயலாளராக இருந்தாலும் அவருக்கு தாய் வீடு என்பது திருப்பத்தூர் மாவட்டமாக  தான் இருக்கும்.

    பல துறைகளுக்கு செயலாளராக இருந்தாலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஒரு கோப்பு வருகின்ற பொழுது அதை விரைவாக கோப்பில் கையெழுத்து இட்டு நிறைவு செய்ய வேண்டும் என்று கருதுவார்கள். அந்த வகையில் புதிதாக நான்காவது மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பேற்று இருக்கின்றார் அவருக்கு அனைவரும் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரின் பொறுப்பை உணர்ந்து பணியாற்றி விட்டு சென்னைக்கு செல்கின்ற பொழுது உங்களுக்கு என திருப்பத்தூர் மாவட்டத்தில் பல அடையாளங்கள் இருக்க வேண்டும். மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு பணியாற்றுகின்ற பொழுது நம்ம ஊர் கலெக்டர் என்று பாராட்டுகின்ற அளவிற்கு இந்த மக்கள் நன்றி உணர்வோடு இருப்பதற்கு மக்களோடு பின்னி பிணைந்த பணியாற்ற வேண்டும் என்று இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்காக பல திட்டங்களை தீட்டி வருகிறார். பெண்கள் சமுதாயத்தில் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள், ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று என்ற நிலை உருவானது. பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் சொத்துரிமை இருவருக்கும் சமம் என்று மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர்  முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார்கள்.

  அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்கள் பெண்களுக்காக செயல்படுத்தி வருகிறார். பெண்கள் சுயமாக சிந்திக்க வேண்டும் சுயமாக பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும் என்ற அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் முதன்முதலாக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்ற ஒரு குழுவை உருவாக்கினார்.

   அது நாளடைவில் இலட்சக்கணக்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் வங்கியிலே கடன் பெற்று கட்ட முடியாமல் இருக்கின்ற சூழலில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வங்கி கடனை தள்ளுபடி செய்துள்ளார். மேலும்  புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்கின்ற பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், பெண்களுக்கான கட்டணம் இல்லா இலவச பேருந்து பயணத்திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

   அதனால் அனைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் மற்றும்  உற்ற  துணையாக இருந்து பணியாற்றிய அலுவலர் பெருமக்களுக்கும் மற்றும் ஒன்றியக்குழு, நகர் மன்ற தலைவர்களுக்கும், உறுப்பினர் பெருமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தெரிவித்தார்.

          இவ்விழாக்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர்.உமாமகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.பானு, செல்வி.பிரேமலதா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முனைவர்.ஆயிரத்தரசு இராசசேகரன், தலைமை செயற்பொறியளர் திரு.பழனி, அனைத்து ஒன்றியக்குழு, பேரூராட்சி, நகரமன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.