குப்பை கிடங்காக மாற்றப்பட்ட பாலம்! தரம் பிரிக்காமல் எரிக்கப்பட்ட பிளாஸ்டிக்! நகராட்சி ஊழியர்களால் சுகாதார சீர்கேடு!

கு.அசோக்,
சோளிங்கர் பாலத்துக்கு அடியில் உள்ள பகுதியை குப்பை கிடங்கு போல் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அங்கு சில விஷமிகள் தீ வைத்திருக்கிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி உட்பட்ட 27 வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை திருத்தணி சாலையில் உள்ள குப்பை கிடங்கு கொட்டி மக்கும் குப்பை மக்கா குப்பை தரம் பிரித்தெடுக்க வேண்டும் என்பது நகராட்சியின் உத்தரவாகும்.
ஆனால் ஊழியர்கள் ஓடை மேம்பாலத்தின் கீழ்பகுதியில் குப்பை கொட்டி வந்தனர். இந்நிலையில், குப்பைகளுக்கு விஷமிகள் சிலர் தீவைத்து கொளுத்தி உள்ளனர்.இதனால் குப்பையில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் தீயில் கருகி புகைமூட்டமாகவும் துர்நாற்றம் வீசி வருகிறது.இதனால் வாகன ஓட்டுகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பிரிக்க வேண்டிய குப்பைகளை ஓடையில் கொட்டி நிலத்தடி நீர் மாசுபாடுவதோடு சுகாதாரத் கேடு ஏற்படுவதாகவும், மேலும் ஓடை கால்வாயில் குப்பைகளை டன் கணக்கில் கொட்டி வருவதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் பார்வையிட்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் நகராட்சி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.