பண நாயகத்தை ஜனநாயகம் வெல்ல வேண்டும்! அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு பேச்சு!

பண நாயகத்தை ஜனநாயகம் வெல்ல வேண்டும்! அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு பேச்சு!

ஜி.கே.சேகரன்,

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்றால் ராணிப்பேட்டையில் குரோமியம் கழிவுகளை அகற்றுவேன்  பாமக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பாலு முத்துக்கடையில் பேச்சு.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்  பாமக வேட்பாளர் வழக்கறிஞர்  பாலு அவர்களை ஆதரித்து அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் ராணிப்பேட்டை முத்துகடை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்  பேசிய வேட்பாளர் வழக்கறிஞர் பாலு   அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜெகத்ரட்சகன் தொகுதிக்கு எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவும் இல்லை வளர்ச்சி பணிக்கு கொண்டு செல்லவும் இல்லை.

அரக்கோணம் தொகுதியில் அடிப்படை வசதி கூட கிடைக்காத கிராமங்கள் கூட இன்னும் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறச் செய்தால் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் மலைபோல் உள்ள குரோமியம் மற்றும் அதன் கழிவுகளை அகற்றுவேன் ,

வாலாஜா அரசு மருத்துவமனை நவீன மருத்துவமனையாக மாற்றுவேன், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை குறித்து தனிக்குழு வைத்து ஆய்வு செய்து வருகிறேன்.

 மனு தாக்கல் செய்த பிறகு அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு தேவை என்னவென்று அறிக்கையை தெரிவிப்பேன்.

மத்தில் மோடி வெற்றி பெற செய்யவும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி எல்லையும் வெற்றி பெறச் செய்தால் மக்கள் தேவை, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவேன் என உறுதி அளித்தார்.

மேலும் பணநாயகத்தை ஜனநாயகம் வெல்ல வேண்டும் . அனைத்து கூட்டணி கட்சி  நிர்வாகிகளும் உறுப்பினர்களும் உழைத்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர். கூட்டத்தில் பாமக ராணிப்பேட்டை மேற்குமாவட்டசெயலாளர் சரவணன்,உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.