போட்டு தள்ளிடுவேன் கேரள முதல்வரை மிரட்டிய 12 வயது சிறுவன்!!

எஸ்.செல்வராஜ்,
எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன், கேரள முதலமைச்சரை கொலை செய்யப்போவதாக தொலைபேசியில் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநில காவல் துறை தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசியவர், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, அழைப்பு வந்த நம்பரை காவல் துறை சோதனை செய்தது. போனில் பேசியது எர்ணாகுளத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் என்பது விசாரணையில் தெரியவந்தது.
தவறுதலாக அழைப்பு விடுத்ததாக சிறுவனின் பெற்றொர் தெரிவித்துள்ள நிலையில் இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்து கேரள காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.