மழைக்காலம் சரியாக பணியாற்றுங்க! டாக்டர்களுக்கு எம்.எல்.ஏ. அட்வைஸ்!!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
தற்போது மழைக்காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இராஜபாளையம் தொகுதியில் அதிகளவில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதால் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையிலும் பிஏசிஆர் ஆஸ்பத்திரிக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மருத்துவர்களிடம் பேசிய அவர் தற்போது இராஜபாளையம் தொகுதியில் அதிகளவில் காய்ச்சலால் குழந்தைகளும் பொதுமக்களுக்கும் பாதிக்கபட்டு வருவதால் மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிடமும் கனிவுடன் பேசி அவர்களிடம் அவர்களுக்கு சாதரண காய்ச்சலா அல்லது வைரஸ் காய்ச்சலா என்பதை நன்கு ஆய்வு செய்து அதற்கான சிகிச்சையை முறையாக வழங்க வேண்டுமெனவும் தினசரி இரண்டு மருத்துவமனையிலும் எத்தனை புறநோயாளிக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறதுஎன மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலளித்த தலைமை மருத்துவர் அவர்கள், தினசரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் 150 முதல் 200 புறநோயாளிகளுக்கும் பிஏசிஆர் அரசு மருத்துவமனையில் 800 முதல் 1000 வரையிலான புறநோயாளிகளுக்கும் மருத்துவம் பார்க்கப்படுவதாக கூறினார்.
பின்னர் அவர் மருந்து மாத்திரைகள் அனைத்தும் தற்போது தேவையான அளவு இருப்பு உள்ளதா என்பதை தினசரி கண்காணிக்கவும் தேவைப்படும் மருத்துகளை கால தாமமின்றி உடனடியாக வாங்கி வைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
மேலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றால் வீட்டில் வைத்து மருந்து கொடுப்பதை தவிர்த்துவிட்டு உடனடியாக குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டுமென இதன் மூலம் பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் அன்பான வேண்டுகோள் வைப்பதாகவும் கூறினார்.
அதனைத்தொடர்ந்து பிஏசிஆர் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பூமி பூஜை செய்து அதற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அப்பணியில் தற்போது முதல் தளத்திற்கான கான்கீரிட் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் கான்கீரிட் அமைக்கப்பட்டதை ஆய்வு செய்தார்.
கான்கீரிட் மிகவும் தரமாகவும் உறுதியாகவும் அமைக்கப்படுவதை தெரிந்து கொண்டதாகவும், இப்படி தொடர்ந்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு அதன்படிநிலையை பொதுமக்களுக்கு தொடர்ந்து தெரியப்படுத்தி வருகிறேன் எனக் கூறினார். மேலும் மருத்துவமனையின் கட்டிடப்பணியை தொடர்ந்து விரைவுபடுத்தி அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் பணி முடிக்க திட்டமிடப்படுள்ளது எனக் கூறினார்.
இந்நிகழ்வில் தலைமை மருத்துவர் (பொறுப்பு) மாரியப்பன் அவர்கள் மருத்துவர் சுரேஷ் அவர்கள், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் பாலசுப்பிரமணியன் கவுன்சிலர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாரிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் , மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.