12 பா.ஜ.க. எம்பிகள் ராஜினாமா! எம்.எல்.ஏ.க்கள் ஆகிவிட்டதால் திருப்பம்!

12 பா.ஜ.க. எம்பிகள் ராஜினாமா! எம்.எல்.ஏ.க்கள் ஆகிவிட்டதால் திருப்பம்!

 ம.பா.கெஜராஜ்,

 5 மாநில சட்டசபை தேர்தலில்  மத்திய மந்திரிகளாக இருந்த சிலரும், எம்.பி.க்கள் சிலரும் போட்டியிட்டனர். இவர்களில் 12 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அப்படி வெற்றி பெற்றவர்களில் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர், நீர்வளத்துறை இணை மந்திரி பிரகலாத்சிங் பட்டேல் ஆகியோரும் உள்ளனர்.

   இவர்கள் மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். 2 மத்திய மந்திரிகளும் நேற்று நாடாளுமன்றத்தில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

  அதேபோல், மத்தியபிர தேசத்தைச் சேர்ந்த ராகேஷ் சிங், உத்ய பிரதாப் சிங் மற்றும் ரித்தி பதக், ராஜஸ்தானை சேர்ந்த கிரோடி லால் மீனா, தியா குமாரி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சத்தீஸ்கரைச் சேர்ந்த கோமதி சாய், அருண் சாவ் ஆகியோரும் நேற்று தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்த 10 எம்.பி.க்களில் கிரோடிலால் மீனாவை தவிர மற்ற அனைவரும் மக்களவை உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.    

 இந்நிலையில்,12 பேரும் ராஜினாமா கடிதங்களை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் மக்களவை சபாநாயகர் ௐ பிர்லாவிடம் அளித்தனர்.முன்னதாக அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றனர்.