சவுக்கு சங்கரை தூக்கிலிட வேண்டும்! அணி சேரும் பெண்கள் அமைப்புகள்! குவியும் புகார்கள்!!
டி.இ.முகமது,
பெண்காவலர்களை இழிவாக பேசிய சவுக்கு சங்கரை தூக்கிலிட வேண்டும் என்று பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்தும், அவர்களது பணி குறித்தும் அவதூறாக பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் கிரைம் போலீசாரிடம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் புகார் அளித்திருக்கிறார்.
யூடியூபரான சவுக்கு சங்கர் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேனியில் கைது செய்யப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கஞ்சா வைத்திருந்தாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருக்கிறது.
அதற்காக அவர் தரப்பில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு நீதிமன்றம் நீதிமன்றகாவல் அளித்து உத்தரவிட்டது. அப்போது சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உடலில் காயம் ஏதும் ஏற்படவில்லை. சிறையில் வைத்து சித்ரவதை செய்ததாகவும் சவுக்கு சங்கர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் சிறையில் சவுக்கு சங்கர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். அது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அதே போல் சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்த அறிக்கையை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் பெற்று தாக்கல் செய்ய பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் நேற்று மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். போலிஸ் படையுடன் வந்த அவருக்கு வலது கையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. அப்போது சவுக்கு சங்கருக்கு மே 22-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீடிப்பு செய்து உத்தரவிடப்பட்டது.
சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகும் தகவலை கேள்விப்பட்ட பெண்கள் அமைப்பின திடீரென நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு கூடினர். சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள்ரங்கு திரண்டிருந்தனர். அவர்கள் சவுக்கு சங்கருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றத்திற்கு வந்த சவுக்கு சங்கருக்கு கோர்ட்டின் வெளியே விளக்கமாறு ,செருப்பு ஆகவே கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனா.¢ மதுரை பெண்கள் பாதுகாப்பு மையம் அமைப்பினர்! "மதுரை மாவட்ட பெண்கள் பாதுகாப்பு மையம்" என்கின்ற மஞ்சள் நிற பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் நீதிமன்ற வாசலில் கூடினர்.
"சவுக்கு சங்கரை தூக்கிலிட வேண்டும்" என அந்த பதாகைகளில் வாசகங்கள் இருந்தன.
இதனையடுத்து போலீசார் தடுப்புகள் அமைத்து மகளிர் அமைப்பினரை உள்ளே செல்ல விடாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, "தூக்கிலிடு, தூக்கிலிடு பாலியல் குற்றவாளி சவுக்கு சர்க்கரை தூக்கிலிடு" என்றும், "பெண் காவலர்களை இழிவு படுத்திய கஞ்சா சங்கரை குண்டாஸில் கைது செய், நீதி அரசர்களை அவமானப்படுத்திய கஞ்சா சங்கரை குண்டாஸில் கைது செய்" என்றும் முழக்கமிட்டு பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க, நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ள சங்கரை மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தனிப்பிரிவில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கும் முன் அவரது உடலில் எவ்வித பாதிப்பும் இல்லை. தற்போது, அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கூறியிருந்தார்.
அதை மறுத்துள்ள சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள், சிறையில் அவரை யாரும் தாக்கவில்லை என்று விளக்கம் அளித்திருந்தா£.¢ அதே போல் தேனியில் இருந்து கோவைக்கு அழைத்து வந்தபோது போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கி சவுக்கு சங்கருக்கு காயம் ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது நினைவு கூறத்தக்கதாகும்.
சவுக்கு சங்கர் மீது முசிறி டிஎஸ்பி யாஸ்மின், மற்றும் தமிழர் முன்னேற்றபடை தலைவர் வீரலட்சுமிராகியோர் புகார்களை அளித்திருக்கிறார்கள். அதன் பேரில் பல ஊர்களுக்கு அவரை போலிசார் அழைத்துச்சென்று வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.