மோடி ஜீ... என்று கிண்டலாக பேசிய ராகுல்!

வி.டி.வித்யாசாகர்,

 அதானி மற்றும் அம்பானியிடன் வேன் மூலமாக கட்டு கட்டாக காங்கிரஸ் பணம் பெற்றது என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காங்கிரஸ் கட்சிக்கு வேன் நிறைய பணம் கொடுத்தார்களா? என்பதை விசாரிக்க அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புமாறு பிரதமர் மோடிக்கு ராகுல் காந்காந்தி கிண்டலாக பதில் அளித்துள்ளார். 

 பிரதமர் மோடி நேற்று தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்தார். கரீம்நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது "காங்கிரசும், பி.ஆர்.எஸ். கட்சியும் வேறுபட்டவை அல்ல. ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் பூஜ்ஜிய ஆட்சி ஆகியவை இந்த இரு கட்சிகளையும் இணைக்கிறது. இரு கட்சிகள் இடையே ஊழல் பொதுவான காரணியாக உள்ளது.

 காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.

பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.

 அவர்களிடம் இருந்து வேன் நிறைய கட்டுக்கட்டாக பணம்பணம் காங்கிரஸ் பெற்றுள்ளதா? என்பதை ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என்றும் மோடி பிரச்சாரத்தில்¢ பேசினார்.  

  பிரதமரின் இந்த கேள்விக்கு ராகுல் காந்தி நேற்று பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் தனது தனிப்பட்ட அனுபவத்தை கூறியிருப்பதாக கிண்டல் செய்துள்ளார்.

 பிரதமர் மோடி இந்த இரண்டு தொழிலதிபர்களுக்கு (அதானி, அம்பானி) கொடுத்த பணத்தை, காங்கிரஸ் கட்சி வாக்குறுதியளித்த பல்வேறு திட்டங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு அதே தொகையை வழங்கும். பா.ஜ.க. இந்த வேன் ஊழலின் டிரைவா யார்¢ உதவியாளர் யார்? என்பதை நாடறியும்" என்று நக்கலடித்திருக்கிறார்.