தக்காளி இஞ்சி மாலையுடன் வேலூர் அதிமுகவினர் ஆர்பாட்டம்!

தக்காளி இஞ்சி மாலையுடன் வேலூர் அதிமுகவினர் ஆர்பாட்டம்!

 ஜி.கே.சேகரன்,
  வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் அதிமுக சார்பில் தக்காளி இஞ்சி புளி துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் திமுக அரசின் ஊழல்களை கண்டித்தும் தக்காளி இஞ்சி பூண்டு உள்ளிட்ட காய்கறி மாலைகள் அணிந்து நூதன முறையில் ஆர்பாட்டம் நடைபெற்றது 
 வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் தமிழக அரசைக்கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், மாவட்ட பொருளாளர் காகிதப்பட்டரை மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ராமு, அண்ணாமலை, எம்.ஏ.ராஜா, சிவாஜி, நாகு, குப்பன், ரகு, தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
இதில் மக்கள் தினந்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி இஞ்சி,பூண்டு புளி துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை விலை விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது.
   ஆகவே இந்த விலைகளை கட்டுபடுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், மக்கள் வாங்கும் விலையில் தக்காளி உள்ளிட்ட பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரியும் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த கோரியும் திமுக அரசின் தொடர் ஊழல்களை கண்டித்தும் இஞ்சி தக்காளி,காய்கறிகள் மாலை அணிந்தும்  திரளான அதிமுகவினர் நூதன முறையில் ஆர்பாட்டம் செய்து  கோஷங்களை எழுப்பினார்கள்.
 அதே போல் ராணிப்பேட்டை மாவட்டம் முத்துகடையில் விலைவாசி உயர்வு மற்றும் திமுக அரசின் ஊழல்களை கண்டித்து அதிமுகவினர் ஆர்பாட்டம் செய்தனர் 
   அரக்கோணம் சட்டமன்ற உறுப்பி சு.ரவி தலைமையில் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.