ஆடையின்றி அழைத்து செல்லப்பட்ட இரண்டு பெண்கள்! மணிப்பூரில் எல்லை மீறும் வன்முறையாளர்கள்! நீதிபதிகள் வேதனை!

ஆடையின்றி அழைத்து செல்லப்பட்ட இரண்டு பெண்கள்! மணிப்பூரில் எல்லை மீறும் வன்முறையாளர்கள்! நீதிபதிகள் வேதனை!

.பா.கெஜராஜ்,
மணிப்பூரில் இரு பிரிவினரிடையே மோதல் நடந்து வருகிறது, தற்போது இதுபெருங்கலவரமாக மாறிவிட்டது. இந்த பிரச்சனையில் சுமார் 54 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து அண்டை மாநிலங்களில் புகலிடம் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
 
இருந்த போதும் பலரது வீடுகள், கட்டிடங்கள், பள்ளிகள் தாக்கப்பட்டன, வழிபாட்டு தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதுவரை 142 பேர் பலியானதாகவும், 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அப்படியிருக்க, இம்மாநில கலவரம் தொடர்பாக மே மாதம் நடைபெற்றதாக சொல்லப்படும் ஒரு சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது
   
அந்த வீடியோவில் ஆண்கள் நிறைந்த கும்பல் ஒன்றில் இருபெண்கள் ஆடையின்றி அழைத்து செல்லப்படுகிறார்கள். பிறகு அவர்கள் மானபங்கபடுத்தப்படுகிறார்கள். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த வீடியோ காட்சிகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் தங்களது கடுமையான வேதனையை தெரிவித்துள்ளது
   
இதுகுறித்து நீதிபதிகள் தெரிவித்திருப்பதாவது:- இது எங்களை மிகவும் மனதளவில் பாதித்திருக்கிறது. இந்த சம்பவம் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் உடனடியாக தலையிட்டு அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து, அதனை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நாங்கள் அரசாங்கங்களுக்கு அவகாசம் அளித்து காத்திருக்கிறோம். ஆனால் எதுவும் நடைபெறவில்லையென்றால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று அந்த பெஞ்ச் கூறியிருக்கிறது.
 
அப்போதும் கூட மத்திய அரசு வாயை திறக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை?