ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் தாதா உட்பட மேலும் மூவர்  கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் தாதா உட்பட மேலும் மூவர்  கைது!

ம.பா.கெஜராஜ்,
கடந்த ஐந்தாம் தேதி அன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் சென்னையில் அவரது வீட்டு அருகே கொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கு தொடர்பாக 11 பேர் போலீஸ் பிடியில் சிக்கிய நிலையில், அவர்களை  ஐந்து நாள் போலீஸ் விசாரணை செய்வதற்காக நீதிமன்றம்  அனுமதி கொடுத்தது.

  அவர்களில் திருவேங்கடம் என்பவன்  என்கவுண்டர் செய்யப்பட்டான். 

அப்படி இருக்க மேலும் மூவரை போலீசார் கைது  செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அவர்களில் ஒருவர் பெண் தாதா மலர்கொடி என்பதும் அவர் ஒரு தாதாவின் மனைவி என்பதும், அதேபோல் அவருடன் பிடிபட்டவர் ஹரிகரன் என்கின்ற இளம் வழக்கறிஞர் என்பதும் தெரிய வந்தது.

இந்த வழக்கறிஞர் ஹரிகரன் தான், ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கான திட்டத்தை  செயல்படுத்திருக்கிறார்.அதற்காக அவர் திருவள்ளூர் வழக்கறிஞர் அருளை ஏற்பாடு செய்துள்ளார்.

மேலும் இதற்காக வழக்கறிஞர் ஹரிகரன் வழக்கறிஞர் அருளுக்கு பெரும் தொகை ஒன்றை செலுத்தியது அனைத்தும்  போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 

தற்போது பிடிபட்டிருக்கும் பெண் தாதா மலர்கொடி ஏற்கனவே சிந்தாதிரிப்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வெடிக்க செய்து ஒரு குற்ற சம்பவத்தை நிகழ்த்தி சிறைக்குச் சென்றார் என்பதும் அவரது மகனும் பிரபல ரவுடி என்பதும் சுட்டிக் காட்டப்பட கூடியதாகும்.