2000 ரூபாய் பணத்திற்காக ஏற்பட்ட தகராறு வாலிபருக்கு கத்திக்குத்து! நான்கு பேர் கைது!

ஜி.கே.சேகரன்,
2000 ரூபாய்க்காக கொலை நடந்த சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பெரிய மூக்கனூர் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் கோடீஸ்வரன். இவர் அதே பகுதியை சேர்ந்த தங்கம் மகன் வெள்ளையன் என்கின்ற மணிகண்டன் என்பவரிடம் சில வருடங்களுக்கு முன்பு 2000 ரூபாய் பணத்தை கொடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த வருடம் கோடீஸ்வரன் சிங்கப்பூருக்கு சென்று ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.
அப்போது தான் 2000 ரூபாய் கொடுத்ததை கோடீஸ்வரனின் பெரியம்மா பையனான கிருபாகரன் என்பவரிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி கிருபாகரன் மற்றும் மணிகண்டன் உடன் சிலர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது அப்போது தனது அண்ணனுக்கு மணிகண்டன் 2000 ரூபாய் கொடுக்க வேண்டும் அதனைக் கொடு என்று கேட்டதாகவும் தெரிகிறது.
இதன் காரணமாக மணிகண்டன் மற்றும் கிருபாகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அங்கு வந்த கோடீஸ்வரனுக்கும் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மணிகண்டன் மற்றும் அவருடைய நண்பர் டில்லி பாபு ஆகியோர் கோடீஸ்வரனை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது.
இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோடீஸ்வரன் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து வந்து மணிகண்டனின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில்
கொலை சம்பவத்தில் அடியத்தூர் பகுதியைச் சேர்ந்த டில்லி பாபு மற்றும் வசந்த் ஆகியோரையும் அதேபோல் பெரிய மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் நவீன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கொடுத்த 2000-த்தை திரும்ப கேட்கும் பொழுது ஏற்பட்ட வாய் தகராறில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.