அட காமுகா? மனுஷனாடா நீ?

ஜி.கே.சேகரன்,
ஜோலார்பேட்டை அருகே கைப்பற்றப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலம் தொடர்பான விசாரணையில் மூன்று பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அருகே சுமார் 37 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.
அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜோலார்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் கார்களின் பதிவெண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தி வந்தனர்.
அப்போது கார் ஒன்று சந்தேகத்துக்கு இடமான வகையில் அந்த இடத்தில் நின்று சென்றதைக் கண்ட காவல்துறையினர் அந்த பதிவெண் சம்மந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
அதன் பிறகு காரின் உரிமையாளர் கமல் நாதனை வரவழைத்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அறங்கல் துருகம் பகுதியை சேர்ந்தவர் முருகன் வயது 47 இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோழி பண்ணை நடத்தி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர்.
முதல் மகள் 23 வயதாகி உள்ள நிலையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார்.இந்நிலையில் முருகன் கடந்த 23ஆம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகளை தன்னிடத்தில் வேலை செய்யும் தங்கையின் கணவரான மணிகண்டனிடம் விட்டுவிட்டு குடும்பத்தோடு திருப்பத்தூருக்கு வந்துள்ளார்.
பிறகு வீட்டிற்கு சென்றபோது மகள் அழுதபடியே இருந்துள்ளார் அப்போது மகளை விசாரித்ததில் மணிகண்டன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை சைகை மூலமாகவே தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகன் மற்றும் அவரது மகன்( 19 வயது) நவீன் ஆகியோர் இருவரும் சேர்ந்து மணிகண்டனை கடுமையாக தாக்கி கொலை செய்து விட்டு சடலத்தை எங்கு கொண்டு போய் வைப்பது என்று தெரியாமல் திகைத்தனர்.
பின்னர், முருகனின் மருமகனான வாணியம்பாடி அடுத்த வனகுப்பம் பகுதியை சேர்ந்த கமலநாதன்(30) என்பவர் அழைத்து அவரது காரில் மணிகண்டனின் சடலத்தை தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் வீசி விடலாம் என எடுத்துச் சென்றுள்ளனர்.
வழியில் வாகன சோதனை நடப்பதை அறிந்த அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி பகுதியில் சாலை ஓரமாக வீசிவிட்டு சென்றுள்ளதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதன் பிறகு காவல்துறையினர் அந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.