மலேசியாவில் இருக்கும் மகனை மீட்டு தர வேண்டும்... தாய் கண்ணீருடன் மனு!

மலேசியாவில் இருக்கும் மகனை மீட்டு தர வேண்டும்... தாய் கண்ணீருடன் மனு!

ஜி.கே.சேகரன்,

 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி சொக்கரிஷி குப்பம் பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

 அந்த மனுவில், என்னுடைய மகன்  மணிகண்டன்  கடந்த 2022 -ம் ஆண்டு மலேசியாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார். அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் மூலம் வேலைக்கு சென்றார். அங்கு  ஓட்டலில் வேலை செய்து வந்தபோது கடந்த ஒரு வருடமாக என் மகனுக்கு அவருடைய முதலாளி மூலமாக தொல்லைகள் இருப்பதாகவும் எங்களுடைய ஊருக்கு வந்து விடுவதாகவும் கூறி அழுது கொண்டே இருந்தார்.

  தற்போது 2 மாதங்களுக்கு முன்பு நான் ஊருக்கு வந்து விடுகிறேன் என்று கூறினார். ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை.

 அவருடைய தொலைபேசி  சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.  எனது மகனை சிறிய அறையில் வைத்து அடைத்து வைத்து கொடுமை படுத்துகின்றனர். எனது மகனை மீட்டு தர வேண்டும்  இவ்வாறு அவர் கூறியுள்ளார் மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரிடம் கூறினார்.