மணல் கடத்தலை தடுக்க ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் புகார்! ஆனால் நடவடிக்கைதான் இல்லை!

மணல் கடத்தலை தடுக்க ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் புகார்! ஆனால் நடவடிக்கைதான் இல்லை!

அ.ஜோ மோசஸ்,

மணல் கடத்தலை தடுக்க ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் புகார் அளித்தும் கூட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையாம் போலீசார்.

 திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான நத்தம் கிராம பஞ்சாயத்தில் அரசாங்க புறம்போக்கு நிலத்திலிருந்து மணல் மற்றும் மண் ஆகியவை தோண்டி கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

 இந்த கடத்தலில் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 அவரது சட்டவிரோத செயலால் தனி நபாகள் பலர்  ஆதாயம் அடைந்து வருகிறார்கள். 

 இந்த சட்டவிரோத சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்று காகங்கரை பகுதியைச் சேர்ந்த கே.என்.சுரேஷ் என்பவர்  ஜி.பிஆர்.எஸ் வீடியோ ஆதாரத்துடன் கந்திலி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தாராம்.

ஆனால் அந்த புகாரின் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதற்கு திருப்பத்தூர் தொகுதி மக்கள் பிரதிநிதிதான் காரணம் என்று கூறப்படுகிறது.

 புகார் அளித்தப் பின்னர் கடத்தல் சம்பவம் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அங்கு தற்போது கூடுதலாக மண் மற்றும் மணலை கடத்த பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

அது சரி...!?