ஆவடி மாநகராட்சியில் அடாவடி பொறியாளர்கள்! அரசின் பெயரை தவறாக பயன்படுத்த முயற்சி!

ஜி.சாந்தகுமார்,
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் 12 -ஐ ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் மேம்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
பின்னர் ஆட்சிக்கு வந்த அரசு மேற்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் கண்டுபிடித்தது. அதற்கு அவர்கள் முன் குவிந்த என்ணற்ற புகார்களே காரணம்.
இந்நிலையில் அது குறித்து ஆய்வு நடத்திட ஓய்வு பெற்ற ஐ. எ. எஸ். அலுவலரான ப.வி.ச.டேவிதார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு ஸ்மார்ட் சிட்டி நடைபெற்ற 12 மாநகராட்சிகளில் ஆய்வு நடத்தி அனைத்திலும் முறைகேடு இருப்பதாக ஆதாரங்களுடன் அறிக்கை தயாரித்து சமர்பித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க,ஆவடி ஹவுசிங் போர்டு மற்றும் கோபாலபுரம் பகுதியில் மழை நீர் கால்வாயில் சுமார் 40 கோடி ரூபாய் ஊழல் நடைப்பெற்றதாகவும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆவடி ஹவுசிங் போர்டு தலைவரும் சமூக ஆர்வலருமான பரணிதரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இவற்றையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என ஆவடி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் கடந்த ஆட்சியில் ஏழு வருடமாக ஆவடி மாநகராட்சி பொறியாளர் துறையில் பல கோடிகள் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார்கள் கூறப்படுகிறது. இதனை ஆய்வு செய்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை குறித்தும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி ஊழல் வழக்கு சம்பந்தமாக ஆவடி பொறியாளர் மனோகரன் மற்றும் சத்தியசீலனை அழைத்து விசாரணை மேற்கொள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் கூறப்படும் நிலையில் எங்களை ஒன்றும் செய்ய முடியாது நாங்கள் எல்லாவற்றையும் சரிகட்டிவிட்டோம் என்று வெளியில் சொல்லி, நேர்மையாக நடவடிக்கை எடுத்து வரும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயல்கிறார்களாம்.