கம்மல் விற்ற பணத்தை லஞ்சம் வாங்கிய வருவாய் அதிகாரி!

கம்மல் விற்ற பணத்தை லஞ்சம் வாங்கிய வருவாய் அதிகாரி!

உ.சசிக்குமார்,

வாரிசு சான்றுக்கு லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை அலுவரின் செயல் பலரையும் வெறுபேற்றியிருக்கிறது.

 சென்னை, தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர்கள் சசிக்குமார் லட்சுமி தம்பதியினர். கூலி தொழில் செய்து வரும் இவர்கள் வாரிசு சான்று பெற இ-சேவை மையத்தில் பதிவு செய்தனர். பின்னர் அந்த தகவலை தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றும் தனசேகர் என்பவரிடம் சொல்லி விண்ணப்பம் செய்ததற்கான ரசீதை கொடுத்துள்ளனர்.

 கடந்த ஒரு மாதத்துக்கு முன் விண்ணப்பித்த அவர்களை,  தனசேகர் பலமுறை அலைகழித்தார். இதனால் சோர்வடைந்த சசிக்குமார் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். சரி, கடைசியாக ஒருதடவை தனசேகரை சந்தித்து கேட்டுவிடலாம் என்று  தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த அலுவலர் தனசேகரை சந்தித்தனர்.

 அப்போது ஆத்திரப்பட்ட தனசேகர், ஏம்மா வெறும் கையை வீசிக்கொண்டு வந்தால் எப்படிம்மா வாரிசு சான்று கொடுக்க முடியும், தாசில்தாருக்கு பணம் தந்தால் தான் அதை கொடுப்பார். ஆகவே 30,000/- பணத்தை கொடு என்று சொல்லியிருக்கிறார். அதற்கு சசிகுமார் தம்பதியினர் எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை 15 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று சொல்லினர். அதற்கு அலுவலர் தனசேகரும் ஒப்புக்கொண்டார். டீல் ஓகே ஆகிவிட்டது.

 பின்னர் அங்கிருந்து வெளியேறிய சசிகுமார் தம்பதி அங்கு இங்கு கொஞ்சம் பணத்தை புரட்டியதுடன், காதிலிருந்த கம்மலை விற்று தனசேகரிடம் 15 ஆயிரத்தை கொடுத்தனர்.

 அதை தனசேகருக்கு தெரியாமல் பதிவும் செய்துகொண்டனர். இதனால் தனசேகர் தற்போது வசமாக சிக்கியிருக்கிறார். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.அருணா இ.ஆ.பா. அவர்களின் பார்வைக்கு இந்த விவகாரம் சென்றுள்ளது.