மருத்துவரே வருவதில்லை! நர்ஸ் மட்டும் வாரம் ஒருமுறை வருகிறார்!

மருத்துவரே வருவதில்லை! நர்ஸ் மட்டும் வாரம் ஒருமுறை வருகிறார்!

 ஜி.கே.சேகரன்,

 திருப்பத்தூர் அருகே திருவண்ணாமலை வட்டம் பகுதியில் உள்ள பொது சுகாதார மற்றும் நோய்தடுப்பு மருத்துவமனைக்கு மருத்துவர் வருவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு, மருத்துவமனை அருகே செல்லும் கழிவுநீரால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

   திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் பஞ்சாயத்திற்குட்பட்ட திருவண்ணாமலை வட்டம் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

   இந்த நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  30 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவமனை கடந்த ஆண்டு 20.12.2023 தேதியன்று திறக்கப்பட்டது.

  மருத்துவமனை திறக்கப்பட்டு ஒரு வருடம் கூட முழுமை அடையாத நிலையில் அந்த பொது சுகாதாரம் மருத்துவமனைக்கு வாரத்திற்கு ஒருமுறை மட்டும் செவிலியர் வந்து செல்வதாகவும் மேலும் முறையான மருத்துவர் யாரும் மருத்துவமனைக்கு வந்து மருத்துவம் பார்ப்பதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  மேலும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மருத்துவமனைக்கு அருகாமையில் செல்வதால் கொசு தொல்லை அதிகரித்து அப்பகுதி மக்களுக்கு டெங்கு உள்ளிட்ட நோய் தொற்று ஏற்படும் அபாயநிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.

  எனவே துறை சார்ந்த அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.