களையெடுக்கும் இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் டிராக்டரில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதில் சிக்கி 5 வயது சிறுவன்உயிரிழப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பகுதியில் சதீஷ் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டரில் தனது 5 வயது மகன் மகவூர்ராதே என்பவரை பக்கத்தில் உட்கார வைத்து களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக களை எடுக்கும் இயந்திரத்தில் சிக்கி ஐந்து வயது சிறுவன் உயிரிழந்தான்.
ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை வழக்குபதிவு செய்து சிறுவனின் உடலை பிரேதபரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சிறுவன் களை எடுக்கும் டிராக்டரில் சிக்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.