மத்திய அரசு கொண்டு வரும் தொழிலாளர் விரோத சட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது! 108 சங்கத்தினர் குறைபாடு!

மத்திய அரசு கொண்டு வரும் தொழிலாளர் விரோத சட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது! 108 சங்கத்தினர் குறைபாடு!

க.பாலகுரு,

  பாஜகவை எதிர்க்கும் கட்சி போன்று திமுக முகத்திரையை வைத்துக்கொண்டு தொழிலாளர் விரோத சட்டங்களை செயல்படுத்திவருவதாக கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் தென்னிந்திய பொதுச் செயலாளர் ஆனந்தன் குற்றச்சாட்டு.

 திருவாரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா ஆகியவை சார்பில் மே தின அரங்கக்கூட்டம் திருவாரூர் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலுமிருந்து சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் வேதராஜ் முன்னிலை வகித்தார்.

  போராடி பெற்ற 8 மணி நேர வேலையை நிராகரிக்கும் நோக்கத்தோடு மத்திய, மாநில அரசுகளால் கொண்டுவரப்படவுள்ள திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

  கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் தென்னிந்திய பொதுச் செயலாளர் ஆனந்தன் கூறியது:

  கடந்த மே தினத்தின் போது எட்டு மணி நேர வேலை என்பதை குறைக்கும் நோக்கத்தோடு தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் விளைவாகவே தற்போது இந்த மே தின அரங்கக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

 மத்திய அரசால் கொண்டுவரப்படுகிற தொழிலாளர் விரோத சட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. பணி நிரந்தரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, வேலை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. பாஜகவை எதிர்க்கின்ற கட்சியாக திமுக முகத்திரையை வைத்துக்கொண்டு தமிழகத்தின் பாஜக வாக தொழிலாளர் விஷயங்களில் திமுக செயல்பட்டு வருகிறது என்றார்.