சந்தன மரங்களை கடத்தியவர் கைது!

சந்தன மரங்களை கடத்தியவர் கைது!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆர்.ஆ£. நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் (வயது 30). இவர் அதே பகுதியில் உள்ள கம்மாபட்டி சாலையில் நூர்பாலை வைத்து நடத்தி வருகிறார்.

  இந்த நூற்பாலை வளாகத்தில் அரசியார்பட்டி கிராம நிர்வாக அலுவலரின் முறையான அனுமதி பெற்று 100 சந்தன மரங்களை நட்டு வளர்த்து பராமரித்து வருகிறார்.

  இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் நூற்பாலை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் அவர் அங்கிருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்றனர். சத்தம் கேட்டு ஓடிவந்த இரவு காவலாளி கிருஷ்ணசாமி மற்றும் மேற்பார்வையாளர் விநாயகமூர்த்தி, நூற்பாலை ஊழியர் மாடசாமி ஆகியோர் சந்தன மரங்களை வெட்டிய மர்ம நபரை துரத்தினர்.

  இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அந்த நபர் அனைவரையும் மிரட்டிவிட்டு வெட்டிய மரங்களுடன் தப்பியோடி மறைந்தார்.

 இதுகுறித்து உரிமையாளர் ராஜபாளையம் ( தெற்கு) காவல் நிலையத்தில் கொடுத்த  புகாரின் பேரில்   வழக்குப்பதிவு செய்த போலிசார் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் கணபதி அவர்கள் தலைமையில் சேத்தூர் பகுதியை சேர்ந்தவர் பால்சாமி என்பவர் கைது செய்யப்பட்டா£.¢