சட்டமன்றத்தில் பேசி ஒன்றும் நடக்காது! கொங்கு ஈஸ்வரன் விரக்தி! அணி தாவுகிறாரா?

சட்டமன்றத்தில் பேசி ஒன்றும் நடக்காது! கொங்கு ஈஸ்வரன் விரக்தி! அணி தாவுகிறாரா?

ஜி.குலசேகரன்,

மத்திய மாநில அரசுகள் ஏன் எல்லை பாதுகாப்பு படைவீரர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க மறுக்கிறார்கள் - சட்டமன்றத்தில் பேசிவிட்டால் எதுவும் நடக்காது என்பது நான்கரை ஆண்டுகள் ஆன பின்னர் எனக்கு தெரிய வருகிறது - கொங்கு தேசிய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் காட்பாடியில் பேச்சு.

 வேலூர்மாவட்டம், காட்பாடியில் எல்லைபாதுகாப்பு படைவீரர்கள் நலசங்கம் சார்பில் 61 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. சங்க மாநில தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இதில் கூட்டுறவுத்துறை இணை இயக்குநர் குண ஐயப்ப துரை உள்ளிட்டோரும் திரளான எல்லைபாதுகாப்புபடைவீரர்கள் அவர்களின் வாரிசுகளும் கலந்துகொண்டனர்.

  இதில் 1972 ஆம் ஆண்டு போரின் போது எல்லைபாதுகாப்பு படையில் பணியாற்றிய அப்போதைய வீரர்களுக்கு நினைவுப்பரிசினை கொங்கு தேசிய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் வழங்கினார்

   பின்னர் விழாவில் கொங்கு தேசிய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசுகையில் நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனால் ராணுவம் வேறு துணை ராணுவம் வேறு என்பதே எனக்கு இப்போது தான் தெரியும்.

   சட்டமன்றத்தில் பேசினால் எல்லாம் நடந்துவிடும் என நினைத்தேன் ஆனால் சட்டமன்றத்தில் நான்கரை ஆண்டுகள் ஆன பின்னர் தான் தெரியும் சட்டமன்றத்தில் பேசிவிட்டால் எதுவும் நடக்காது என்று.

   காலங்காலமாக சாதி மதபாகுபாட்டை பார்க்கின்றோம், ஆனால் ராணுவத்தில் பாகுபாடு என்பது எனக்கு தெரியாது எல்லோரும் எல்லைபாதுகாப்பு படையை பாராட்டி தான் பேசினார்கள் ஆனால் மத்திய மாநில அரசுகள் ஏன் உதவி செய்வதற்கு தயங்குகின்றனர்.

 மாநில அரசு மூலம் என்ன திட்டங்களை எல்லை பாதுகாப்பு படைவீரர்களுக்கு செய்ய முடியுமோ செய்வோம் மத்திய மாநில அரசு பிரச்சணை வேறு நமது பிரச்சணை வேறு பொதுமக்களும் எல்லைபாதுகாப்பு படைவீரர்களை தான் ஆதரிப்பார்கள்.

 அரசாங்கம் உங்களுக்கு உரிய கௌரவத்தை மத்திய மாநில அரசுகள் கொடுத்து தான் ஆக வேண்டும். பள்ளி கல்லூரிகளில் போதைக்கு அடிமையாகி குற்ற செயல்களை செய்கின்றனர்.

 அதனை தடுக்க வேண்டும் அவர்களை ஒழுக்கமானவர்களாக வளர்க்க வேண்டும் குற்றம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் நமக்கு மேல் ஒரு சக்தி நம்மை பார்க்கிறது என்ற எண்ணம் இருந்தால் அவர்கள் நல்லவர்களாக வளர்வார்கள். குற்றம் அதிகமாகிவிட்டது என கணக்குபோட்டு பிரயோஜனம் கிடையாது அவர்களை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என பேசினார்.

 திமுக கூட்டணி சார்பில் வென்ற அவர், எதிர்வரும் தேர்தலில் அணி தாவப்போகிறார் என்றே அவரது பேச்சு அமைந்திருக்கிறது.