பெண்ணுக்கு முத்தம் கொடுத்த தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள்! பள்ளிக்கூடத்துக்கு பூட்டு! சக ஆசிரியர்கள் தூண்டுதலா என்று சிஐடி போலிசார் விசாரணை!

ஜி.கே.சேகரன்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் கம்ப்யூட்டர் ஆபரேட்டரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தலைமை ஆசிரியர் மீண்டும் பள்ளிக்கு வேண்டும் என கோரி மாணவர்கள் கேட்டை பூட்டி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியுடவுன் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி இவர் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பூனைகுட்டை பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 12 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
மேலும் இதே பள்ளியில் பெரிய மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி(26) என்ற பெண் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்வழி சான்று அப்ரூவல் கொடுக்கும் வேலையை அந்த பெண் செய்து வந்ததாக தெரிகிறது அப்போது தலைமை ஆசிரியர் இந்த வேலையை சரியாக செய்தால் உனக்கு ஒரு முத்தம் கொடுப்பதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
அதற்கு அந்த பெண் வேண்டாம் சார் இது தவறு என கூறியுள்ளார்.
இருந்தபோதும் சற்று எதிர்பாக்காத நிலையில் அந்தப் பெண்ணுக்கு தலைமையாசிரியர் முத்தம் கொடுத்து அங்கிருந்து சென்றுள்ளார். பயந்து போன அந்தப் பெண் இந்த சம்பவம் குறித்து தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கடந்த 15ஆம் தேதி பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் முற்றுகையிட்ட உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
அதன் பின்னர் ஜோலார்பேட்டை வட்டார கல்வி அலுவலர் அசோக் குமார் சம்பவ இடத்திற்கு வந்தார், அவரிடம் நடந்தவற்றை பெண் புகாராக அளித்தார்.
அதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தலைமையாசிரியர் சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அப்பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தலைமையாசிரியர் இது போன்ற தவறை செய்திருக்க மாட்டார் எனக்கு கூறியும், மீண்டும் தலைமை ஆசிரியர் இந்த பள்ளிக்கு வரவேண்டும் என கோரி பள்ளியின் கேட்டை பூட்டி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் பள்ளி மாணவரிடமும் பெற்றோர்களிடமும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தனர்.
தலைமையாசிரியர் செய்த அந்த கீழ்தரமான செயலுக்கு சக ஆசிரியர்களில் சிலர் ஆதரவாக செயல்பட்டு மாணவர்களை தூசிவிட்டுள்ளார்கள். அதன் பேரில் தான் பள்ளிக்கூடம் பூட்டப்பட்டிருக்கிறது.
ஆகவே இது குறித்து உளவுத்துறையினர் விவரங்களை சேகரித்து வருகின்றனர்களாம்.
https://livelook.in/The-head-teacher-who-kissed-the-female-employee