அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கிகாரம் வழங்க வேண்டும்!

கு.அசோக்,
வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மை பள்ளிகளின் சார்பில் பெருந்திரள் முறையீடு.
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ராஜ்மைக்கேல் தலைமையில் பேலவேந்தரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் திரளானோர் மாவட்ட ஆட்சியரிடம் பெருந்திரள் மனுவை வழங்கினார்கள்.
அரசு உதவி பெறும் மாணவர்களின் நலனை கருதி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 7.5 சதவிகித உயர் கல்வி இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு நிதியுதவி பெறும் மாணவர்களுக்கும் முழுமையாக விரிவுப்படுத்த வேண்டும்.
மேலும் மாணவர்களை கணக்கீடு செய்து அரசு அனுமதித்த காலிப்பணியிடங்களை விதிகளுக்குட்பட்டு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கும் அரசு ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழ் வழி பள்ளிகளுக்கு 1992 ஆம் ஆண்டு அரசு மாணியம் அளித்து அப்போதைய முதல்வர் டாக்டர் கருணாநிதி பிறப்பித்த ஆணையை செயல்படுத்த வேண்டும்.
உதவி பெறும் பள்ளிகளுக்கு அங்கிகாரம் புதுப்பித்தலை எளிமைப்படுத்துவதுடன் தகுதியான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கிகாரம் வழங்க வேண்டும்.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரான பிரிவுகளை உடண்டியாக நீக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த பெருந்திரள் முறையீடு செய்யப்பட்டது இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.