பனைவிதை நட்ட ஆட்சியர் மற்றும் எம் .எல் .ஏ.!

ஜி.கே.சேகரன்,
விரிஞ்சிபுரம் ஏரிக்கரையில் 5 ஆயிரம் பனைவிதைகள் நடும் பணியினை ஆட்சியரும் சட்டமன்ற உறுப்பினரும் துவங்கி வைத்தனா, அதில்¢ நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பனைவிதைகளை நட்டனர்.
வேலூர்மாவட்டம், விரிஞ்சிபுரம் பகுதி ஏரிக்கரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார்.
இதில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பனைவிதைகளை நட்டார். ஊராட்சிமன்ற தலைவர் குணசுந்தரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
நூறு நாள் வேலையில் ஈடுபடும் கிராம பெண்கள் நூற்றுக்கணக்கானோர் ஏரிக்கரையில் பனைவிதைகளை விதைத்தனர்.
இதன் மூலம் ஏரிக்கரை பலப்படுவதுடன் மழை நீர் சேமிக்கபடுகிறது மண் அரிப்பையும் இது தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது