லஞ்சம் வாங்கிய வழக்கில் விஏவுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை!

ம.பா.கெஜராஜ்,
விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் விஏஓ வுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 2000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்நிலையில் இன்னொறு விஏஓ திருவண்ணாமலைமாவட்டத்தில் கைது செய்யபட்டிருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், கடந்த 19.04.2010 ஆம் தேதி ஆம்பூர் தாலுக்கா குமார மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கூடுதல் பொறுப்பாக கரும்பூர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த திரு.தேவராஜிலு த/பெ சென்னப்பன் என்பவர் ஆம்பூர் தாலுக்கா ராமாபுரம் நடுத்தெருவை சேர்ந்த திரு.கோதண்டன் என்பவரிடம் விவசாயிகள் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டம் முதியோர் உதவி தொகை பெறுவதற்கான மனுவை சிபாரிசு செய்ய லஞ்சம் கேட்கப்பட்டது.
அப்படியிருக்க ரூ.2000/- இலஞ்சமாக கேட்டு அதனை தனது உதவியாளர் செல்வம் என்பவர் மூலமாக இலஞ்சம் வாங்கிய வழக்கில் திருப்பத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றம் இன்று 18.10.2024 ஆம் தேதி எதிரி தேவராஜிக்கு மூன்று ஆண்டுகள் சிறைதண்டணையும் ரூ.2000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சியாமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் என்பவர் பட்டா திருத்தம் செய்ய ரூ.3000 த்தை புஷ்பா என்பவரிடம் லஞ்சமாக வாங்கிய போது லஞ்சஒழுப்பு பிரிவினரால் பிடிபட்டார்.
அவர் லஞ்சம் கேபது குறித்து ஏற்கனவே விஜிலென்ஸ் டிஎஸ்பி திருவேல் முருகன் அவர்களுக்கு புகார்கள் சென்ற நிலையில் அவரது தலைமையில்,தவி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் ஏழு பேர் கொண்ட குழுவினர் விஏஓ ரமேஷை சுற்றிவளைத்து கைது செய்தனர்