ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட குளத்தில் மீண்டும் நடவு பணி ஜோர்! மேற்பார்வையிட்ட போலீசார்!

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட குளத்தில் மீண்டும் நடவு பணி ஜோர்! மேற்பார்வையிட்ட போலீசார்!

ம.பா.கெஜராஜ்,

  பலகட்ட போராட்டத்துக்கு பின்னர் குளம் ஆக்கிரமிப்பை அதிலாரிகள் அகற்றி கடமையாற்றினர். ஆனால் அந்த நடவடிக்கையை ஊதாசீனப்படுத்திய ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் அங்கு நடவுப்பணிகளை மேற்கொண்டனர்..

  புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, துவார் கிராமத்தில் பாப்பான்குளம் மற்றும் பறையன் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் துரை குணா அவர்கள் கடந்த 2019 ஆண்டு முதல் போராடி வந்தார்.

 இந்த நிலையில் கடந்த மாதம் நடுக்குளத்துக்குள்ளே நடவு வயல் என சினிமா பாணியில் போஸ்டர் அடித்து புதுக்கோட்டை மாவட்ட முழுவதும் ஒட்டியதின் எதிரொலியாக, வருவாய்த்துறை கடந்த வாரம் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு பணிகளை அகற்றியது.

 அதற்காக  இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் இரண்டு நாள் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்ட குளத்தில், நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மீண்டும் நடவு பணி மிக ஜோராக நடந்து கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

 மேற்படி இந்த அடாவடி செயலை சண்முகராஜா என்பவர் செய்து வருவதை அறிந்த போலிசார் உடனடியாக அங்கு வந்து அவரை எச்சரித்தனர். ஆனால் அதற்குள் சண்முகராஜா குளத்தில் நாற்று நட்டு முடித்துவிட்டார்.

   இந்த நாற்று நடவுபணிகளை தடுப்பதற்காக வந்த போலீசார் சும்மா மேற்பார்வையிட்டுவிட்டு திரும்பிச்சென்றனர்.

 இந்த பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய் அதிகாரிகள் அந்த பக்கமே வரவில்லை. புரட்டாசி மாதம் முடிந்த பின்னர் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால் நாட்டு கோழி சாப்பிடுவதில் அவர்கள் மும்முரமாகிவிட்டார்களோ?