பெண் ஊழியருக்கு முத்தம் கொடுத்த தலைமை ஆசிரியர்!
ஜி.கே.சேகரன்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தற்காலிகமாக பணிபுரிந்து வரும் கம்ப்யூட்டர் ஆபரேட்டருக்கு தலைமையாசிரியர் பாலியல் சீண்டல்! உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு! வட்டார கல்வி அலுவலரிடம் பெண் புகார் - தலைமையாசிரியர் கைது!.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நியுடவுன் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி இவர் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பூனைகுட்டை பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 12 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த பள்ளியில் 256 மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் 13 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 7 பெண் ஆசிரியர்களும், 5 ஆண் ஆசிரியர்களும் உள்ளனர். இந்நிலையில் கெல்ட்ரா என்கிற தனியார் நிறுவனத்தின் சார்பில் பெரிய மோட்டூர் பகுதியை சேர்ந்த ஆனந்தி (26) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கணினி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் கணவனை இழந்தவர் ஆவார்.
இந்த நிலையில் நேற்று மாலை தமிழ் வழி சான்று அப்ரூவல் கொடுக்கும் பணியை ஆனந்தி செய்து வந்ததாக தெரிகிறது.
அப்போது தலைமை ஆசிரியர் இந்த வேலையை சரியாக செய்தால் ஆனந்தி செல்லத்திற்கு ஒரு முத்தம் கொடுப்பேன் என்று கூறி உள்ளார். நான் செல்லம் எல்லாம் ஒன்னும் இல்ல நீங்க போங்க என்று ஆனந்தி கூறிய நிலையில், என்ன உதடு மேல வேர்க்குது என்று கேட்டு கையை வைத்து தடவி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் சமயம் பார்த்து முத்தமிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த பெண் ஊழியர் ஆனந்தி பள்ளி உதவி தலைமை பெண் ஆசிரியரிடம் நடந்தது பற்றி கூறியுள்ளார்.உனக்கு ஒரு முத்தம் கொடுப்பதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
மேலும் ஆனந்தி இந்த சம்பவம் குறித்து இன்று காலை தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அறிந்த ஜோலார்பேட்டை போலீசா£,¢ முற்றுகையிட்ட உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
அதன் பின்னர் ஜோலார்பேட்டை வட்டார கல்வி அலுவலர் அசோக் குமார் சம்பவ இடத்திற்கு வந்தார். அவரிடம் நடந்தவற்றை பெண் புகாராக அளித்தார்.
அதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தலைமையாசிரியர் சுப்பிரமணியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.