இன்ஸ்பெக்டர் பார்தசாரதி உள்ளிட்ட 8 பேருக்கு எஸ்.பி.சான்று வழங்கினார்!

கு.அசோக்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் ஆற்காடு இன்ஸ்பெக்டர் பார்தசாரதி உள்ளிட்ட 8 பேருக்கு சான்று வழங்கி பாராட்டினார்.
இன்று (15/10/2024) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.டி.வி.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை, அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும், மாவட்டத்தில் உள்ள முக்கிய வழக்குகளில் புலன் விசாரணை குறித்தும், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பிடிகட்டளையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கள்ளச் சந்தையில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர் மற்றும் விற்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சட்டவிரோத செயல்கள் மற்றும் ரவுடிதனத்தில் அடிக்கடி ஈடுபடும் குற்றவாளிகள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சரித்திர குற்றப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதிலுள்ள குற்றவாளிகளில் நடவடிக்கைகள் குறித்து அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து பள்ளி, கல்லூரிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் காவலர்கள் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் உட்பட 8 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.