மக்களை காப்பாற்ற வேலை செய்யனும்... முதல்வரிடம் நல்ல பெயர் வாங்கனும்! அமைச்சர் ஆர்.காந்தி அதிகாரிகளுக்கு அட்வைஸ்!!

மக்களை காப்பாற்ற வேலை செய்யனும்... முதல்வரிடம் நல்ல பெயர் வாங்கனும்! அமைச்சர் ஆர்.காந்தி அதிகாரிகளுக்கு அட்வைஸ்!!

கு.அசோக்,

எந்த சின்ன பிரச்சனையும் வரக்கூடாது, மக்களை காப்பாற வேலை செய்யனும், முதல்வரிடம் நல்ல பெயர் வாங்கனும் - பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்   ஆர்.காந்தி அதிகாரிகளுக்கு அறிவுரை.47 இடங்கள் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது 147 முகாம்களில் 8000 பேர் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்ன தேவையோ அத்தனையும் மாவட்ட நிர்வாகம் செய்ய தயாராக உள்ளது அமைச்சர் பேட்டி.

 இராணிப்பேட்டை மாவட்டதில், வடகிழக்கு பருவ மழையையொட்டி பதினாறாம்  தேதி மிக கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இந்நிலையில் மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி  தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

 இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி.மரியம் பல்லவி பல்தேவ், மாவட்ட ஆட்சியர் சந்திரகலாமாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் ஆய்வு செய்தார்.

  பின்னர் அமைச்சர் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாவட்டத்தில் எந்த ஒரு சின்ன பிரச்சனையும் வரக்கூடாது. முதல்வரிடம் நல்ல பெயர் வாங்கனும். மக்களை காப்பாற்ற நாம் வேலை செய்யனும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

  மாவட்டத்தில் 47 இடங்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 147 நிவாரண முகாம்களில் 8,500 பேர் தங்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இல்லாமல் 154 திருமண மண்டபங்களை முகாம்களாக தேவைப்படும் பட்சத்தில் அவையாவும் தயார் செய்யப்பட்டுள்ளது.

  369 ஏரிகளில் ஒரு ஏரி மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதிகாரிகள் ஏரிகளின் நிலை குறித்து கண்காணித்து வருகிறார்கள். 4 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது.

  மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வருவாய் துறை மூலம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

  மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிக்காக சுமார் 3000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மக்கள் பாதிக்காத வகையில் என்ன தேவையோ அத்தனையும் மாவட்ட நிர்வாகம் செய்ய தயாராக உள்ளது என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சொன்னார்.

 

  1. சார்பதிவாளர் கயல்விழி மீது நடவடிக்கை எடுங்கள்! மறுத்தால் அலுவலகத்தை பூட்டுவோம்! பொங்கி எழுந்த கட்சியினர்!

கு.அசோக்,

கலவை சார்பதிவாளரை பணியிடை நீக்கம் செய்வதோடு சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 இராணிப்பேட்டை மாவட்டம், கலவை சார் பதிவாளர் அலுவலகம் எதிரில் சார்பதிவாளர் கயல்விழியின் அலுவலக நிர்வாக சீர்கேடு மற்றும் பொதுமக்களை அலைக்கழிக்கும் அராஜக ஆணவப் போக்கை கடித்து அதிமுக, பாமக, சி.பி. எம், சி.பி.ஐ, பொதுநலச் சங்கம் என அனைத்து கட்சியினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 30 வருடங்களுக்கு முன் கலவை சுற்றியுள்ள ஏழை எளிய ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவசமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பட்டாவை வைத்து பத்திரப்பதிவு மேற்கொள்ள மறுத்து வருவதை குறித்து கண்டிக்கப்பட்டது.

 மேலும்  வருவாய்த்துறை அளித்த பட்டாவின் மீது நம்பிக்கை இல்லாமல் மெய்தன்மை சான்று கேட்டு பொதுமக்களை மாதக்கணக்கில் அலைக்கழிக்கும் அதிகாரத் திமிரைக் கண்டித்தும், நேர்மை நேர்மை என்று மாலை 6 மணிக்கு மேல் புரோக்கரை வரவைத்து ஏழை வயிற்றில் அடித்து கழிவறைக்கு அருகே கல்லா கட்டும் சார்பதிவாளரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

  ஏழை மக்களுக்கு ஒரு பத்திரப்பதிவும் பணக்கார மக்களுக்கு ஒரு பத்திரப்பதிவு என பாகுபாடு காட்டும் நவீன தீண்டாமையை கண்டித்தும், ஆமைப்போல் செயல்படும் நிர்வாக உள்ளிட்ட கண்டனத்தை முன் வைத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 அதில் சார்பதிவாளர் கயல்விழி மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பணியிட நீக்கம் செய்யாவிட்டால் பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என்பதையும் அவரின் சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என கண்டன பேருரையில் முழக்கம் செய்தனர்.