வேலூரில் சக்தி அம்மா மருத்துவமனை!

கு.அசோக்,
வேலூர் கிரீன் சர்கிள் பகுதியில் ஸ்ரீ சக்தியம்மா மருத்துவமனையை சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார் கார்த்திகேயன் ஆகியோர் திறந்து வைத்தனர்
வேலூர்மாவட்டம்,வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் கிரீன் சர்கிள் பகுதியில் நாராயணி மருத்துவமனை மற்றும் தங்ககோவில் சார்பில் ஸ்ரீ சக்தியம்மா மருத்துவமனை துவக்க விழாவானது மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி தலைமையில் நடந்தது.
அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமா£,¢ வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் மருத்துவமனையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.
இவ்விழாவில் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்
ஏற்கனவே அரியூர் பகுதியில் இயங்கி வரும் நாராயணி மருத்துவமனை சார்பில் ஏழை எளியமக்களுக்கு பல்வேறு சமூக சேவை உணர்வுடன் சேவைகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.