குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு வாக்கா? வருத்தமளிக்கிறது என டாக்டர் அம்புமணி ராமதாஸ் பேட்டி!

குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு வாக்கா? வருத்தமளிக்கிறது என டாக்டர் அம்புமணி ராமதாஸ் பேட்டி!

 ஜி.கே.சேகரன்,

  மக்கள் காமராஜர் காலத்தில் அண்ணா காலத்தில் சின்னத்தை பார்த்து வக்களித்தனர் காரணம் நல்ல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் இப்போதும் தமிழக மக்கள் அதே போல் குற்ற பிண்ணனி உள்ள வேட்பாளர்களுக்கு கூட சின்னத்தை பார்த்து வாக்களிப்பது வருத்தமளிக்கிறது - பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் திருப்பத்தூரில் பேட்டி.

  திருப்பத்தூர் அடுத்த புலிக்குட்டை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின்  மற்றும்  மாநில வன்னியர் சங்க செயலாளர் டி.கே.ராஜா இல்ல திருமணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும்  ஜிகே மணி கலந்து கொண்டனர்.

 பின்னர் பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் செய்தியாளர்களிடம்  கூறுகையில் உண்மையான வேட்பாளர்களை காமராஜர் அண்ணா நிறுத்தியதால் மக்கள் சின்னத்தை பார்த்து தேர்தல்களில் வாக்களித்தனா.¢ ஆனால் இப்போது பல வேட்பாளர்களுக்கு விவரம் தெரியவில்லை, பேச தெரியவில்லை, குற்ற வழக்கு உள்ள வேட்பாளர்களை தமிழக மக்கள் தேர்வு செய்தது வருத்தமளிக்கிறது.

 ஒரு சில வேட்பாளர்கள் டெல்லி சென்று பேச கூட முடியாது. அவர்கள் தொகுதிக்கு என்ன செய்ய போகிறார்கள்? அப்படி பட்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள்! மக்களும் இதனை சிந்திக்க வேண்டும். எங்கள் இலக்கு நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும். அடுத்து திமுக அதிமுக இல்லாத மூன்றாவது கட்சி ஆட்சி அமைக்க வேண்டும்.

  2026 ஆம் ஆண்டு தேர்தல் தான் எங்கள் இலக்கு.  திமுக கொடுத்த 90 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றபடவில்லை. சமூக நீதி வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றவில்லை. நீட் விலக்கு, மாதம் தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு, 32 விழுக்காடு மின் கட்டணம் குறையும், ஆனால் அந்த நோக்கம் அவர்களுக்கு இல்லை.

  5 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டும் மின்சார துறை நஷ்டத்தில் இயங்குவது நிர்வாக திறன் இன்மை.  10 ஆயிரம் கோடி நஷ்டம் என சொல்கிறார்கள். அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரபடவில்லை.

  சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த என்ன தடை என புரியவில்லை. எங்களுக்கு அதிகாரமில்லை என முதல்வர் பொய் சொல்கிறா£.¢ பிஹாரீல் இட ஒதுக்கீட்டை சாதி வாரி கணக்கெடுப்பு மூலம் உயர்த்தியுள்ளனர். ஆனால் தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என சொல்வதை ஏற்றுகொள்ள முடியாது.

  கஞ்சாவை ஒழிக்க நடவடிக்கை இல்லை ஆட்சியில் இருப்பவர்களுக்கு தெரிந்து தான் கஞ்சா வியாபாரம் நடக்கிறது. முதல்வர் ஆய்வு செய்தார் என செய்தி மட்டும் வரும். காவல்துறையை சார்ந்தவர்களை டிஸ்மிஸ் செய்தால் காவல்துறையின் நடவடிக்கை தீவிரமாகும்.

  யாராக இருந்தாலும் எந்த ஜாதி அமைப்பு கட்சியாக இருந்தாலும் கஞ்சா விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன் லைன் சூதாட்டம் காரணமாக 70 பேர் தற்கொலை செய்துகொண்டனா. சட்டங்கள் கொண்டு வந்தும் அவைகள் தடை செய்யப்படாததால் கடந்த 15 நாட்களில் ஆன் லைன் சூதாட்டத்தால் 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

 இவர்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லை, விவசாயிகள் பிரச்சணை, காவிரி, பாலாறு, வைகை, தென் பென்னை உள்ளிட்ட ஆறுகளில் 5 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணையை கட்ட வேண்டும்.

  மணல் கொள்ளையடிக்கவே தடுப்பணையை கட்ட மறுக்கின்றனர்.  கொள்ளிடம் ஆற்றில் 110 கிலோ மீட்டரில் 10 தடுப்பணையை கேட்டோம். ஆனால் 17 மணல்குவாரிகளை துவங்கியுள்ளனாஎன்ன ஆட்சி நடத்துகின்றனர்.         கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது தண்ணீர் தர வேண்டுமென ஸ்டாலின் கேட்டு பெற வேண்டும். மேகதாது 70 டி.எம்.சி கொள்ளவு கொண்ட அணையாக கட்ட முடிவு செய்தனர் அப்படி  செய்தால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது.

  ஆந்திர முதல்வராக பதவி ஏற்றுகொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துக்கள் திமுக குறுகிய தொலை நோக்கு எங்களின் தொலை நோக்கு தமிழகத்தை எப்படி காப்பாற்றலாம் என்பது தான் மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். 40 தொகுதியில் போட்டியிட்டால் அவ்வளவு சதவிகிதம் தான் வரும் அதை வைத்து விவாதம் செய்வதெல்லாம் வேடிக்கையாக நகைச்சுவையாக உள்ளது என சொன்னார்.