சீமான் சந்தேகப்பட்டது சரிதான்!  நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வெறுப்பேற்றும் கரும்பு விவசாயி!  

சீமான் சந்தேகப்பட்டது சரிதான்!   நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வெறுப்பேற்றும் கரும்பு விவசாயி!  

ம.பா.கெஜராஜ்,

கடந்த கால தமிழக தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இன்றைக்கு மற்ற அரசில் கட்சிகளுக்கு சவாலாக இருப்பதை மறுக்க முடியாது. அதற்கேற்றவாறு வாக்கு வங்கியை அக்கட்சி உயர்த்தி வைத்திருக்கிறது.

  அப்படியிருக்க அக்கட்சிக்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டது. அந்த சின்னத்தை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த "பாரத ஐக்கிய மக்கள் கட்சி"க்கு முன் கூட்டியே ஆணையம் வழங்கிவிட்டது.

  இதனால் நாம் தமிழர் கட்சிக்கு அவர்கள் டிரேட்மார்க் சின்னம் கிடைக்கவில்லை.

இதனால் பொங்கிய சீமான், பல்வேறு முன் உதாரணங்களையும், விதிகளையும் சுட்டிக்காட்டி சட்ட போராட்டம் நடத்தினார். ஆனாலும் நா.த.க.வுக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்படவில்லை. மாறாக மைக் சின்னம் கொடுக்கப்பட்ட்டு பிரச்சாரம் ஓடிக்கொண்டிருக்கிறது.

 நா.த.க.வுக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கக்கூடாது என்று திட்டமிட்டே பிஜேபி செயல்பட்டிருக்கிறது. எனது வாக்கு வங்கியை சீர்குலைக்க இப்படி செய்கிறார்கள் என்று சீமான் குற்றம் சாட்டி பேசி வந்தார்.சீமான் அப்படி குற்றம் சாட்டி பேசியதில் உண்மை இருக்கிறது என்பதற்கு தற்போதைய சம்பவங்களே ஆதாரம்.

  அதாவது கர்நாடக மாநிலத்தில் உள்ள "பாரத ஐக்கிய மக்கள் கட்சி" கரும்பு விவசாயி சின்னத்தை வைத்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள குட்டி குட்டி கட்சிகளுடன் கூட்டு வைத்து விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்றன.

  இதனால் நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர்.

 இந்நிலையில் தான், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வழிமறித்து தாக்கிய நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 திராவிட தெலுங்கு தேசம் கட்சி, நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரத ஐக்கிய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் கூட்டணி வேட்பாளர் முனி ஆறுமுகத்திற்கு கரும்பு விவசாயி சின்னத்தை வழங்கியுள்ளது பாரத ஐக்கிய மக்கள் கட்சி.

  அந்த கெத்தில், முனி ஆறுமுகம் காரில் கரும்பு விவசாயி சின்னம் பொறித்த கொடியுடன் ஓசூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது கும்மனூர் சாலை சந்திப்பில், அவரது காரை மடக்கிய, 20க்கும் மேற் பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் முனி ஆறுமுகத்தை வெளுத்துக்கட்டிவிட்டனர்.

 இது புகாராக பதிவு செய்யப்பட்ட நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த, கிருஷ்ணகிரி நகர செயலாளர் அருண்மொழி, மாவட்டச் செயலாளர் நரேஷ் குமார் மற்றும் சுமல் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 இதே போல், தமிழகம் முழுவதும் பல தொகுதிகளில் பாரத ஐக்கிய மக்கள் கட்சிகூட்டணி வைத்து கரும்பு விவசாயி சின்னத்தில் வேட்பாளர்களை களத்தில் இறக்கிவிட்டு சீமானை சீண்டிப்பார்க்க முயன்றுள்ளார்கள்.

 இதையெல்லாம் வைத்து பார்த்தால், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கக்கூடாது என்றும்அதே போல், மதிமுக, விசிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளுக்கு இந்த தேர்தலில் அவர்கள் கேட்ட சின்னங்கள் கிடைக்கவில்லை. இதைவைத்து, தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவது தெளிவாகவே புரிகிறது.