கீழே சாய்ந்த மருத்துவ மரத்தை காப்பாற்றுங்களேன்!

கீழே சாய்ந்த மருத்துவ மரத்தை காப்பாற்றுங்களேன்!

கு.அசோக், 

 வாலாஜா  பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட செங்கருங்காலி மரம் கனமழையின் காரணமாக வேரோடு சாய்ந்தது

  இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையானது பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகரத்தில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில் மிகவும் பழமை வாய்ந்த பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட செங்கருங்காலி மரம் வேரோடு சாய்ந்தது.

   பக்கவாதம், இதய நோய், மற்றும் மனித வாழ்க்கையில் வெற்றி தரும் எண்ணற்ற நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்கள் வாய்ந்த இம்மரத்தை நகராட்சி நிர்வாகத்தினர் வெட்டி அப்புறப்படுத்தாமல் அதனை பத்திரமாக வேறு இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் என பலர் கோரிக்கை வைக்கின்றனர்.

  ஆனால் அதை எந்த அதிகாரியும் காது கொடுத்து கேட்க்கவில்லை