கார், சொகுசு பேருந்து, சுற்றுல்லா வேன் அடுத்தடுத்து மோதல்!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே கார், சொகுசு பேருந்து, சுற்றுல்லா வேன் ஆகிய 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து 1 பெண் உயிரிழப்பு10 பேர் படுகாயம்.
திருப்பத்தூர் மாவட்டம். ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியை சேர்ந்த பிரகதீஷ்வரன் என்பவர் தனது குடும்பத்தினருடன், சென்னைக்கு சென்று மீண்டும் காரில் வீடுதிரும்பினார். கார் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு வேலியில் மோதி சாலையின் நடுவே தலைகீழாக கவிழ்ந்து.
இதில் காரில் பயணம் செய்த பிரகதீஷ்வரினின் தாய் திலகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், அதே சாலையில் சென்ற சொகுசு பேருந்து, காரின் மீது மோதாமல் இருக்க சாலையில் நிறுத்த முற்பட்டபோது, பெங்களூர் நோக்கிச் சென்ற சுற்றுல்லா வேன் அந்த பேருந்தின் பின்புறம் மோதியதில் சுற்றுல்லா வேனில் பயணம் செய்த 8 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்ட வாகன ஓட்டிகள் அவர்களை சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்விபத்து நடந்த இடத்திற்கு சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துடன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.