பருவ மழை சீசனில் போராட்டக்களத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்த்தி தர வேண்டுமென பொது வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் கூலி உயர்வை உயர்த்தி உயர் அதிகாரிகளுக்கும் மாநகராட்சிக்கும் அனுப்பியும் கூலி உயர்வை வழங்காமல் இருப்பதை கண்டித்து இந்த பொது வே லை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.
பகுஜன் சமாஜ் தூய்மை தொழிலாளர்கள் மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இதில் சுமார் 300 பேர் பங்கேற்றனர்.
சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் தூய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 700 வழங்கப்படுகிறது அதே போல் வேலூர் மாநகராட்சியில் வேலை செய்யும் எங்களுக்கும் வழங்க வேண்டும்.
தற்பொழுது தரப்படும் சம்பளம் 430 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது .இதில் பிஎஃப் இஎஸ்ஐ பிடித்தம் போய் 370 ரூபாய் சம்பளம் மட்டுமே பெறுகின்றோம்.
மேலும் தொழிலாளர்களை மிரட்டி பிஎஃப் பணம் 24 சதவீதம் கட்டியதாகவும் அரசு ஆணையை வழங்கிய தொழிலாளர்களை மிரட்டி கையெழுத்து வாங்கி உள்ளதாகவும் தூய்மை பணியாளர்கள் எதிர்காலம் வாழ்வாதாரம் கேள்விக்குறி குறியாகி உள்ளதாகவும், இந்த அரசு ஆணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் முழங்கினர்.
மேலும் முறைகேடு ஒப்பந்தங்களை கேன்சல் செய்ய வேண்டும் என்றும் கோரினர்.
இதில் தெரு கூட்டும் தூய்மை தொழிலாளர்கள், திட்டக் குழு மேலாண்மை தொழிலாளர்கள், மலேரியா மாசு ஒழிப்பு தூய்மை தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
இதனால் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.
பருவமழை நேரங்களில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.