இராணிப்பேட்டை அதிமுகவினர் குஷி!

கு.அசோக்,
அதிமுக கட்சியின் 53-ஆவது தொடக்க விழாவை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா மற்றும் சோளிங்கரில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானத்தை வழங்கி கொண்டாடினர்.
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சுகுமார் தலைமையில் மாந்தாங்கல், புளியங்கண்ணு, சிப்காட், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, கலவை, திமிரி, அம்மூர், மற்றும் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு பூ மலர்கள் மாலைகளை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதோடு கட்சி தொடக்க நாளை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதே போல சோளிங்கரில் நகர செயலாளர் வாசு தலைமையில் கொடியேற்றுதல் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் சிலைக்கும் பேரறிஞர் அண்ணா முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.