பெண்ணின் வீட்டில் நுழைந்த எஸ். ஐ! கொதித்த கிராம மக்கள்!

ஜி.கே.சேகரன்,

நள்ளிரவில் கிராமத்தில் அத்துமீறி வீட்டில் நுழைந்து அராஜகம் செய்த திமுக பிரமுகர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் புகார் மனுவை மாவட்ட   காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆதாரங்களுடன் அளித்தனர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிராம மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிடவும் போராட்டம் செய்யவும் முடிவு.

 வேலூர்மாவட்டம், பொய்கை அருகேயுள்ள கன்னிகாபுரம் கிராமத்தில் நேற்று முன் தினம் இரவில் திமுக பிரமுகர் செந்தில் விரிஞ்சிபுரம் காவல் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் என்பவரும் சுமதி என்ற பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்து இரவு 10 மணிக்கு சுமதியை அத்துமீறி கையைபிடித்து இழுத்து வந்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.

  இதுகுறித்து கிராம மக்கள் ஒன்று திரண்டு காவல் உதவி ஆய்வாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் சுமதியின் கணவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது.

 இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நள்ளிரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல் உதவி ஆய்வாளரை திருப்பி அனுப்பியதுடன்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனிடம் நேரில் மனு அளித்தனர்.

  அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் .அமைப்பு செயலாளர் அக்னி வேல்முருகன்,பாமக ஒன்றிய கவுன்சிலர் சிவா ஊர் நாட்டன்மைகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் கலைந்து சென்றனர் இருப்பினும் பாமக மற்றும் பொது மக்கள் இணைந்து அராஜகத்திற்கு முடிவு கட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.