சொகுசு காரில் 400 கிலோ கஞ்சா!
க.பாலகுரு,
ஆந்திராவிலிருந்து 400 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஐந்து பேர் கைது மூன்று சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் விடுதியில் கஞ்சா கடத்தி வருவதாக சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் தொடர்ச்சியாக வாகன பார்க்கிங்கில் வைத்து 400 கிலோ கஞ்சா மாற்ற முயன்ற போது ஐந்து பேரை கைது செய்தனா, அப்போது¢ ஒருவர் தப்பி ஓடினார்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் ஆந்திராவை சேர்ந்த கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கடா , நாராயணா , சிவா , நுனூ, உள்ளிட்ட 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்களை திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் தொடர்ந்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
இதில் 400கிலோ கஞ்சா மற்றும் மூன்று கார்கள் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவிலிருந்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வழியாக இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்றதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.