மாமுல் பெற்றுக்கொண்டு கன்டெய்னரை அனுமதித்ததால் ரயில்வே கேட் சேதம்! மக்கள் அவதி!!

ஜி.கே.சேகரன்,
பெரிய கன்டெய்னர் லாரி ரயில்வே கேட்டில் மோதி கேட் உடைந்து விழுந்து, ரயில் செல்லும் மின்சார ஒயர் அறுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு - அவ்வழியாக செல்லும் சாலையும் அடைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி
வேலூர்மாவட்டம், வேலூர் - பெங்களூர் சாலையில் மாங்காய் மண்டி அருகே ரயில்வே கேட் மற்றும் ரயில் கடவுப்பாதை உள்ளது. இதன் வழியாக கனரக வாகனங்கள் பெரிய கன்டெய்னர்கள் செல்ல அனுமதியில்லை.
ஆனால் அதையும் மீறி அவ்வழியாக பெங்களூர் நோக்கி சென்ற பெரிய கண்டெய்னர் லாரி ஒன்று ரயில்கள் இயக்கப்படும் மின்சார ஒயரை அறுத்துவிட்டு ரயில்வே கேட்டையும் உடைத்தது.
இதனால் அவ்வழியாக இயக்கப்படும் ரயில் நிறுத்தப்பட்டதுடன், மேலும் ரயில்வே கேட்டை கடக்கும் சாலையையும் முழுவதுமாக மூடிவிட்டனர்.
இந்நிலையில் கேட்டை சீரமைத்து துண்டிக்கப்பட்ட ரயில்கள் இயக்கப்பயன்படும் மின்சார ஒயரையும் சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு சரி செய்தனர். இடைபட்ட நேரத்தில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி சுற்றிகொண்டு செல்லும் நிலையும் ஏற்பட்டது.
மாமுல் பெற்றுக்கொண்டு அந்த பகுதி வழியாக கன்டெய்னரை அனுமதித்ததால் ஏற்பட்ட சிரமம் இது என்கிறார்கள்.