புகார் தாரர்களை அசிங்கமாக பேசும் மின்வாரிய ஊழியர்கள் !சாலை மறியல் பரபரப்பு!!

கு அசோக்,
நெமிலி அடுத்த அகவலம் பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக பனப்பாக்கம் நெமிலி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் நடத்தினர்.
நள்ளிரவில் ஏற்பட்ட இந்த திடீர் சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த அகவலம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் பகுதியில் தொடர் மின்வெட்டு நடைபெறுவதாகவும் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அலட்சியமாக பேசுவதாகவும் கூறுகின்றனர்.
இதனால் தொடர் மின்வெட்டு இருப்பதாக கூறி நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் திடீரென நள்ளிரவில் பனப்பாக்கம் -நெமிலி சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த நெமிலி காவல் ஆய்வாளர் லட்சுமிபதி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் லோகேஷ் ஆகியோர் தொடர் பேச்சுவார்த்தை நடத்திய பின் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதற்குப் பின்னரும் மின்வெட்டு ஏற்பட்டது என்பது தான் இதில் கொடுமை.