தாகம் தீர்க்க வந்த மான் பேருந்தில் சிக்கி பலி

தாகம் தீர்க்க வந்த மான் பேருந்தில் சிக்கி பலி

 கு.அசோக்,
அரக்கோணம் அருகே தண்ணீரைத் தேடி ஊருக்குள் வந்த மான் வாகனத்தில் சிக்கி பலி.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் தனியார் பள்ளி அருகே நேற்று இரவு தண்ணீரை தேடி ஊருக்குள் வந்த மான்  பேருந்தில் சிக்கி பலியானது.

இது குறித்து பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தினர்.

கோடை காலத்தில் தண்ணீரை தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் இது போன்ற பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருவது  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வனத்துறையினர் யாரும் அவ்வளவு எளிதில் வரவில்லை என்பது தனி கதை.