ஐஸ் வியாபாரியைக் கொன்ற சிக்கன் பக்கோடா மாஸ்டர்!

கு.அசோக்,
மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட ஐஸ் வியாபாரியை கழுத்து அறுத்து கொலை செய்த சிக்கன் பக்கோடா கடை பணியாளர் கைது சிப்காட் போலீசார் நடவடிக்கை,
ராணிப்பேட்டை மாவட்டம் ,பல்லேரி கிராம பகுதியில் உள்ள அரசு மதுபான கடை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஸ் வியாபாரியான நாராயண மூர்த்தி என்பவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தற்போது ஐஸ் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் கீழ் பல்லேரி சேர்ந்த வெங்கடேசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெங்கடேசனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது, கொலையாளி வெங்கடேசன் பல்லேரி கிராம பகுதியில் உள்ள அரசு மதுபான கடை அருகே சிக்கன் பக்கோடா போடும் கடையில் பணியாற்றி வந்ததாகவும்,
அப்போது மது அருந்துவதற்காக ஐஸ் வியாபாரியான நாராயணமூர்த்தி சிக்கன் பக்கோடா வாங்குவதற்கு வரும்பொழுது வெங்கடேசனுடன் நட்பு ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் வெங்கடேசன் மற்றும் நாராயணமூர்த்தி இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொன்னை பகுதியில் மது அருந்துவதற்காக சென்றதாகவும் அப்பொழுது நாராயணமூர்த்தி மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாகவும் சொன்னார்.
இதனை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை வெங்கடேசன் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் போது இரவு 11.30 மணி அளவில் பல்லேரி அரசு மதுபான கடை அருகே நாராயணமூர்த்தி மது போதையில் இருந்துள்ளார்.
அப்போது வீட்டிற்கு சென்று இருந்த வெங்கடேசன் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தாராம்.
மேலும் வெங்கடேசனை தாக்கியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் அருகே உள்ள தனது வீட்டிற்கு சென்று கத்தியை கொண்டு வந்து தகராறில் ஈடுபட்ட ஐஸ் வியாபாரியான நாராயண மூர்த்தியை கழுத்து அறுத்து கொலை செய்ததாக காவல்துறையினரிடம் வெங்கடேசன் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து வெங்கடேசன் மீது கொலை வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.