எடப்பாடி பழனிச்சாமி உடன் "கோல்டு வார்"இல்லை என்று நிரூபித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

எடப்பாடி பழனிச்சாமி உடன் "கோல்டு வார்"இல்லை என்று நிரூபித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

ஜி.கே.சேகரன்,

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் "கோல்டு வார்" நடப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் எடப்பாடியாரின் பிறந்த தின விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  பிறந்த நாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. 

அதை முன்னிட்டு 100 பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையினை  முன்னாள்  அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70-வது பிறந்த நாளை  தமிழக முழுவதும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகளை செய்து  வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம் மேற்கு மாவட்ட மாணவரணி கழக சார்பில் மாவட்ட கழக செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் .

அதில் முன்னாள் அதிமுக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் மேற்கு மாவட்ட கழக செயலாளர்  .சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

  எடப்பாடி பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

பின்னர் 100 பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஊக்கத்தொகையினை வழங்கி சிறப்பித்தார்..