செல்போன் டவர் வேண்டாம்.. ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்!

செல்போன் டவர் வேண்டாம்.. ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்!

ஜி.கே.சேகரன்,

  செல்போன் டவர் அமைக்கும் பணியை நிறுத்த கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்.

  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சானாங்குப்பம் கண்ணதாசன் நகர் பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க உள்ளனர். இதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள்  தனியார் செல்போன் டவர் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

  செல்போன் டவரிலிருந்து வெளியேறும் கதிர் வீச்சுகளால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என 2000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள்.  எனவே எங்கள் பகுதியில் செல்போன் டவர் வேண்டாம் என கூறி அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

   மேலும்  கண்ணதாசன் நகர் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகளான சாலைவசதி, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் உடனடியாக தங்களின் பகுதிக்கு அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என  கோரி அளித்தனர்.