என்னை கட்சியினர் மதிப்பதில்லை அமைச்சரே! நேரு முன்னிலையில் மா.செ.வைரமணி சங்கடப் பேச்சு!

என்னை கட்சியினர் மதிப்பதில்லை அமைச்சரே! நேரு முன்னிலையில் மா.செ.வைரமணி சங்கடப் பேச்சு!

ர்.ரமேஷ்,

 அமைச்சர் நேரு முன்னிலையில் திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் க.வைரமணி குமுறி தீர்த்துவிட்டார்

 இதுவரை அமைச்சரை எதி˜த்து பேச துணிவில்லாமல் இருந்தவ˜கள் இப்படி பேசியிருக்கிறார்களே என்று பலரும் புருவம் உய˜த்துகிறா˜கள்.

   திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான வைரமணிக்கு அமைச்சரின் சொந்த தொகுதியான லால்குடியில் உள்ள 5 ஒன்றியங்கள், 3 பேரூராட்சிகள், ஒரு நகராட்சியில் பதவியில் உள்ள திமுக நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் வைரமணிக்கு உரிய மரியாதை தருவதில்லையாம்.

 அப்படியிருக்க திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் அண்மையில் நடைபெற்ற 'என் வாக்குச்சாவடி; வெற்றி வாக்குச்சாவடி' ஆலோசனைக் கூட்டத்தில் வைரமணி பேசும்போது அமைச்சர் நேரு முன்பே தனது வெறுப்பை உமிழ்ந்துள்ளா˜.

  அதில் ''ஒரு மாவட்டச் செயலாளரை அழைக்காமல், படம், பெயர், போடாமல் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். திரும்பத் திரும்ப இதை நான் சொல்வது எனக்கு வெட்கமாக இருக்கிறது. இந்தப் பதவியை விட்டுவிட்டுச் செல்லலாம் என கருதுகிறேன்.

  கட்சியில் ஆளுக்கு மரியாதை இல்லை; பொறுப்புக்குத் தான் மரியாதை. என் சொந்த ஊரிலேயே இப்படி ஒரு கூட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு உறுப்பினர் கார்டு கூட இல்லை. திமுகவை ராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்படும் இயக்கம் என்று சொல்கிறார்கள்.

  அப்பேர்பட்ட இயக்கத்தில் சில புல்லுருவிகள் யார் சொல்லிக் கொடுத்து இப்படி செய்கிறார்கள் என்று எனக்குத் தெரிய வேண்டும்'' என்று கொந்தளித்தார்.

   இது குறித்து மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் சில˜ தெKவிக்கையில் 'தன்னை நிர்வாகிகள் மதிப்பது இல்லை என்று நேருவிடம் வைரமணி பலமுறை சொல்லி இருக்கிறார். ஆனால், பிரச்சினையை தீர்ப்பதில் நேரு ஆர்வம் காட்டுவதை தவி˜ப்பதுடன் அப்படிப்பட்டவ˜களை கண்டிப்பதில்லையாம்.

ஓஹோ...அப்படியா சமாச்சாரம்.