சட்டமன்ற உறுதி மொழி குழுவிடம் வசமாக சிக்கிய அதிகாரிகள்!

ஜி.கே.சேகரன்,
திருவள்ளூவர் பல்கலைக்கழக மாணவியர் விடுதி திறப்பு விழாவே செய்யாத நிலையில் விரிசல் - உறுதிமொழி குழு அதிர்ச்சி கட்டிடத்தை தரமாக கட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் பேட்டி.
வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழு ஆய்வு கூட்டத்திற்கு பின்னர்¢ வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,
தமிழ்நாடு அரசு சட்டமன்ற உறுதிமொழி குழு ஆய்வு இன்று வேலூர் மாவட்டத்தில் இன்று 7 இடங்களில் களவு ஆய்வு செய்தோம். 197 கோடியில் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமான பணிகளையும் அரசு அருங்காட்சியகம் விரிவாக்கம் செய்ய எதிரில் உள்ள ஒன்றிய அரசு கட்டிடத்தை வாடகைக்கு பெற்று அதில் இயங்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
ரூ.31 கோடியில், அப்துல்லாபுரம் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணியையும், ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகளையும், திருவள்ளூவர் பல்கலைக்கழக மாணவியர் விடுதி கட்டிடத்தையும், மாநகராட்சி பகுதி மூன்றில் ரூ.311 அமையும் கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றூம் சத்துவாச்சாரியில் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தின் சார்பில் 9 அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்ட கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தோம்.
அப்போது சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். பேரவைக்கு அளிக்கப்பட்ட 83 உறுதிமொழிகளில் 23 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டு 57 நிலுவையில் உள்ளது நிலுவையில் வைக்கப்பட்டது. மேலும் பழைய நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் 66 நிலுவையில் உள்ளது. இம்மாவட்டத்தை பொறுத்தவரையில் 2001 - 2003 வரையில் நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
கள ஆய்வுக்கு சென்று சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுடன் சென்றோம், மிக விரைவாக இதனை நிறைவேற்ற உள்ளோம். பல்வேறு உறுதிமொழிகளை நிறைவேற்ற ஆட்சியர் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து வேகமாக செயல்பட்டு உறுதிமொழியை நிறைவேற்ற கூறியுள்ளோம்.
திருவள்ளூவர் பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக அதனை சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். செய்யவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் செய்தால் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யபடும் என கூறியுள்ளோம்.
டைடில் பார்க் கட்டுமான பணியை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் 3 கோடி பணியை மட்டும் செய்துவிட்டு அதிலிருந்து விலகிவிட்டார். வேறு ஒரு ஒப்பந்ததாரர் மூலம் பணிகளை முடிக்க இன்னும் 6 மாதகாலத்திற்குள் பணி முடிக்கபடும் என டைட்டில் பார்க் மண்டல மேலாளர் குழுவுக்கு சாட்சியம் அளித்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு `1995 ஆம் ஆண்டுகளிருந்து பல உறுதிமொழிகள் நீதிமன்ற வழக்கு நில எடுப்பு காரணமாக நிலுவையில் உள்ளது பல உறுதிமொழிகள் தீர்ப்பாயத்திலும் நிலுவையில் உள்ளன அவைகளுக்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம்.
30 மனுக்கள் இன்று மக்கள் வழங்கினார்கள், அதனை ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம். ஆட்சியர் ஒரு மாதத்திற்குள் பதில் அளிப்பதாக கூறியுள்ளார். திருவள்ளூவர் பல்கலைக்கழக ஊழல்களை விசாரிக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை அதனை விஜிலென்ஸ் அமைப்பு தான் விசாரிக்க வேண்டும். மேலும் திருவள்ளூவர் பல்கலைக்கழக விளையாட்டு மைதானம் அமைக்க 5 ஏக்கர் பட்டா நிலமாக உள்ளது.
அங்கு செல்ல சாலை அமைக்கவும் அதனை பரிசீலிக்கவும் ஆட்சியருக்கு கூறியுள்ளோம். ஆட்சியரும் அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். 151 கோடியில் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என கூறினார்
2001-மற்றும் 2003 ஆகிய மூன்று ஆண்டுகளில் கொடுத்த உறுதிமொழிகள் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருவதாக ஆண்டு கூட தெரியாமல் சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் தவறாக கூறினார். மேலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முதலில் 197 கோடி கட்டுமான பணிகள் நடக்கிறது என்றார் பின்னர் 151 கோடிக்கு பணிகள் நடப்பதாக மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கிறார். உறுதிமொழி குழு உளரலால் அதிகாரிகளும் செய்தியாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.