மேலதிகாரியின் டார்சரால் உயிரைவிட்ட சத்துணவு அமைப்பாளர்!

 மேலதிகாரியின் டார்சரால் உயிரைவிட்ட சத்துணவு அமைப்பாளர்!

ஜி.கே.சேகரன்,

 வேறு பள்ளிக்கு மாற்றியதால் மன உளைச்சலில் இருந்த சத்துணவு அமைப்பாளர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை-குடியாத்தம் போலீசார் விசாரணை.

  வேலூர்மாவட்டம், குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் இவரது மனைவி பாரிஜாதம் (வயது 57) திருமணம் ஆகி இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பாரிஜாதம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிதியுதவி பள்ளியில்  சத்துணவு அமைப்பாளராக  பணியாற்றி வந்தார்.

   பாரிஜாதத்தை வேறு பள்ளிக்கு மாற்றியதாக கூறப்படும் நிலையில், இது குறித்து குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்  மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பாரிஜாதம் கேள்வி  கேட்டதால் அதிகாரிகள் இவரிடம் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.

 இதனால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிடுகிறது. இந்தநிலையில் பாரிஜாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

   இது குறித்து குடியாத்தம்  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் விரைந்து வந்த போலீசார் பாரிஜாதத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

  மன உளைச்சலில் இருந்த வந்த சத்துணவு அமைப்பாளர் பாரிஜாதம் வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரியும், எனது மரணத்திற்கு காரணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் தான்வட்டார வளர்ச்சி அலுவலக மேனேஜர் சுந்தரேசன் சார் மேகலா மற்றும் சத்துணவு அமைப்பாளர் மகாலட்சுமி உள்ளிட்ட மீது குற்றம்சாட்டி இரண்டு பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசு ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.