ராமநாதபுரத்தில் போட்டியிடும் மோடி? ரிஸ்க் எடுப்பாரா அல்லது ரஸ்க் சாபிடற மாதிரி என்பாரா?

ம.பா.கெஜராஜ்,
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோடி அவர்களை தமிழகத்தின், ராமேசுவரம் தொகுதியில் போட்டியிட வைக்கலாமா என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் செம ஆலோசனை ஒன்றை நடத்தினார். இந்த அளவுக்கு பாஜக ரிஸ்க் எடுக்குமா அல்லது ரஸ்க் சாபிடற மாதிரி என்பார்களா தெரியவில்லை?
இது பற்றின விவரம் வருமாறு,
ஐதராபாத்தில் பா.ஜ.க.தேசிய தலைவர் தென் மாநில கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதில் தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய தென் பகுதிகளில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர்களுடன் நட்டா நேரடியாக பேசி ஆலோசனைகளை பெற்றதுடன், அவரும் சில அறிவுரைகளை சொல்லியிருக்கிறார். அப்போது அவர் தென் மாநிலங்களில் இருந்து இந்த தடவை அதிக அளவு பா.ஜ.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும், கட்சியின் தேர்தல் வியூகம் பற்றிய தகவல்கள் உங்களுக்கு வழங்கப்படும். அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும் மாநில தலைவர்களிடம் நட்டா தெரிவித்தார்.
ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் மிக முக்கியமான விசயம் பற்றியும் விவாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தென் மாநிலங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், அந்த தொகுதியை தேர்வு செய்ய ஆய்வு பணி நடந்து வருவதாகவும் மாநில தலைவர்களிடம் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி முதலில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். பிறகு அவர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதேபோன்று இந்த தடவையும் 2 தொகுதிகளில் போட்டியிட மோடி திட்டமிட்டுள்ளார். வாரணாசியிலும், தென் மாநிலங்களில் ஒரு தொகுதியிலும் களம் இறங்க அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
மோடியின் விருப்பம் பற்றி நேற்று நடந்த கூட்டத்தில் ஜே.பி. நட்டா தெரிவித்ததும் தென் மாநில தலைவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். தென் மாநிலங்களில் எந்த தொகுதியில் போட்டியிட்டால் மோடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என்பது பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தனர். பெரும்பாலான தென் மாநில தலைவர்கள் பிரதமர் மோடி தமிழகத்தில் களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழகத்தில் பிரதமர் மோடி எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது. ஏற்கனவே இதுபற்றி ஒரு ரகசிய சர்வே நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கன்னியாகுமரி, கோவை, ராமநாதபுரம் ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் பிரதமர் மோடியை போட்டியிட வைக்கலாம் என்று மாநில தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் களம் இறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பா.ஜ.க. கட்சியின் மத்திய குழுவும் இதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. வட இந்தியாவில் காசியிலும், தென் இந்தியாவில் ராமேஸ்வரத்திலும் போட்டியிடுவதன் மூலம் புதிய எழுச்சியை உண்டாக்க முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.
ராமநாதபுரம் தொகுதியில் தற்போது திமுக வைச் சேர்ந்த நவாஸ் கனி எம்.பி.யாக உள்ளார். அந்த தொகுதியில் கணிசமான அளவுக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளன. எனவே பிரதமர் மோடி அந்த தொகுதியில் போட்டியிடு வாரா? என்பது பற்றி தொடர்ந்து ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன.
தென் மாநிலங்களில் இருந்து இந்த தடவை குறைந்த பட்சம் 50 தொகுதி களில் வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. டார்க்கெட் நிர்ணயித்து உள்ளது.
மோடி அவர்கள் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கமாட்டார் என்பதே மூத்த செய்தியாளர்களின் பார்வை. ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்றால் அப்புறம் அவர்கள் இஷ்டம்.